ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பிடிஒக்கள் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்த விவரம் பின்வருமாறு:
ஆற்காடு பிடிஓ வேதமுத்து அரக்கோணம் பிடிஓ வாகவும், அங்கு பணியாற்றி வந்த பிடிஓ பாஸ்கரன் நெமிலி பிடிஓவாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், நெமிலி பிடிஓ அன்பரசன் சோளிங்கர் பிடிஒவாகவும், அங்கு பணியாற்றி வந்த சாந்தி ஆற்காடு பிடிஓவாக பணியிடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.