அரக்கோணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜோசப் மகன் மகேஷ் (35). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுவில் சனிடைசர் கலந்து குடித்ததில் மயங்கி விழுந்து விழுந்தார்.
உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.