ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள வளையாத்தூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி, கூலி தொழிலாளி. இவரது மகள் ஆனந்தி (18). ஆனந்தி கடந்த 3 ஆண்டுகளாக அடிக்கடி உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோதி தனது மகளை வீட்டில் விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஆனந்தி மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார். 

இதனால் மனவேதனையடைந்த ஆனந்தி பேனில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திமிரி எஸ்ஐ சேட்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் ஆனந்தியின் தாய் ஜோதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.