குறள் : 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

மு.வ உரை :
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

கலைஞர் உரை :
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை :
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

Kural 378
Thurappaarman Thuppura Villaar Urarpaala
Oottaa Kazhiyu Menin

Explanation :
The destitute will renounce desire (and become ascetics) if (fate) do not make them suffer the hindrances to which they are liable and they pass away



இன்றைய பஞ்சாங்கம்
19-05-2021, வைகாசி 05, புதன்கிழமை, சப்தமி திதி பகல் 12.50 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 03.48 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. நவகிரக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 
இன்றைய ராசிப்பலன் - 19.05.2021

மேஷம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். தொழிலில் சற்று மந்த நிலை இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெற்று நெருக்கடிகள் சற்று குறையும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.

மிதுனம்
இன்று குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

கடகம்
இன்று உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

சிம்மம்
இன்று புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உங்களின் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

துலாம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று கால தாமதமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி அடைவதற்கான சூழ்நிலை உருவாகும்.

தனுசு
இன்று உங்களுக்கு மன உளைச்சலும் குழப்பமும் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 03.48 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை மாலை வரை தள்ளி வைப்பது உத்தமம். 

மகரம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 03.48 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்க்கவும்.

கும்பம்
இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.

மீனம்
இன்று வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,