ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 408 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 4615 பேர் கொரோனா நோய்‌ தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
தொற்றின் காரணமாக 24 பேர் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.