இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

 
இந்தியாவில் உள்ள 718 மாவட்டங்களில் 4ல் 3 பங்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 10%க்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் பகுதிகளான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொற்றின் பரவல் வேகம் அதிகமாக உள்ளதாகவும் ஏப்ரல் 15 ஆம் தேதியே பாதிப்பு 10%ஆக உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கிற்கு அரசு வலியுறுத்தியதாகவும். ஆனால் மத்திய அரசு முழு ஊரடங்கு என்பது கடைசி தீர்வாகவே இருக்கும் என கூறிவிட்டதாகவும் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.