ஆற்காடு ஆரணி சாலையில் உள்ள  தனியார் லக்ஷ்மி திரையரங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆரணி சாலையில் உள்ள தனியார் லக்ஷ்மி திரையரங்கில் கரோனா வைரஸ் தொற்று விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாத காரணத்தினால் ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அபராதம் விதித்து மேலும் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.