ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 76.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் (தனி), சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து வாக்களிமாலை 7 மணி நிலவரப்படி அரக்கோணம் தொகுதியில் 74.74 சதவீதமும், சோளிங்கா் தொகுதியில் 80.01 சதவீதமும், ராணிப்பேட்டையில் 74.36 சதவீதமும், ஆற்காடு தொகுதியில் 77.80 சதவீதமும் என மாவட்டத்தில் மொத்தம் 76.72 சதவீதம் வாக்குப் பதிவானது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சோளிங்கா் தொகுதியில் 80.01 சதவீதமாக உள்ளது.