தமிழக சுகாதாரத்துறை இன்று( வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக 6 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16, 295 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாகப் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16, 079 ஆக உள்ளது.

இதுவரை 190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மருத்துவமனைகளில் 26 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.