பைபாஸ் சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதி வாலிபர் பரிதாபமாக பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் பிரோஸ்ட் வயது 36 இவர் நேற்று முன்தினம் மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார், பைக் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்,அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது அதன்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.