வேலூர்: விமான நிலையம் அமைக்க மேலும் 16 ஏக்கர் நிலம் வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் உள்நாட்டு விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விமான நிலைய கட்டிடம் மற்றும் விமான ஓடுதளம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அப்துல்லாபுரம்- இலவம்பாடி வழியாக அணைக்கட்டு செல்லும் சாலை விமான நிலைய பணிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்று சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் விமான நிலைய பணி முன்னேற்பாடுகள்குறித்த ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விமானம் நிலையம் அமைப்பதற்கு கூடுதலாக 16 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. 

அணைக்கட்டு சாலையில் உள்ள மரங்கள், குடிநீர் குழாய், கேபிள் ஒயர் ஆகியவற்றை அகற்ற வேண்டும். மாற்றுப்பாதையில் குடிநீர் குழாய் ,கேபிள் ஒயர்கள் அமைக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.