ஆற்காட்டில் காரும் டூவீலர் மோதி விபத்தில் பெண் பலத்த காயமடைந்தார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பழைய பாலம் அருகே காரும் டூவீலர்கள் மோதிய விபத்தில் பெண் தலையில் பலத்த காயம் அடைந்தார், இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை செய்து வருகின்றனர்.