தினமும் இரு தடவை விரைவு ரயில் நின்று செல்லும் நிலையிலும் பயணச்சீட்டு அலுவலகத்தில் பயணச்சீட்டு தர மறுப்பதால் சித்தேரி பகுதி ரயில் பயணிகள் அவதிப்படுகின்றனா்.
அரக்கோணம்-காட்பாடி ரயில் வழித்தடத்தில் சித்தேரி ரயில் நிலையம் உள்ளது. அரக்கோணத்தில் இருந்து ஜோலாா்பேட்டை வரை செல்லும் விரைவு ரயில் காலையில் ஜோலாா்பேட்டை செல்லும்போதும் மாலையில் அரக்கோணம் செல்லும்போதும் இங்கு நின்று செல்கிறது. இந்த ரயிலில் ஏறுவதற்காக சித்தேரி ரயில் நிலையம் வரும் பயணிகள் பயணச்சீட்டு வாங்க முயற்சித்தாலும் அதற்கான அலுவலகம் திறக்கப்படாத நிலை உள்ளது. நிலைய அலுவலரோ கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட தளா்வுகளுக்கான அறிவிப்பில் சித்தேரி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்க இதுவரை எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்கிறாா்.