ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சுரேஷ் (32), டிரைவர். இவர் கடந்த 12ம் தேதி சோளிங்கர் ஆர்கே பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டம் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த பைக் எதிர்பாராதவிதமாக சுரேஷ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.