கலவை அடுத்த வேம்பி பகுதியில் தனியாக வசித்து வரும் மூதாட்டியை தாக்கி 4 சவரன் தங்க சங்கிலி கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலவை அடுத்த வேம்பி பகுதியில் ரங்கநாதன், ரங்கநாயகி ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த மர்ம நபர், மூதாட்டி ரங்கநாயகி அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து, மூதாட்டி அளித்த புகாரின் பேரில் கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், மர்ம நபரின் தோற்றம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கைது செய்து தருவோம் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.