காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள சோமநாதர் ஈஸ்வரன் கோவில் குளக்கரையில் 61 வயது நபர் கால் தவறி விழுந்து உயிரிழந்தார்.
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அல்லி முத்து நாயக்கர் தெருவை சேர்ந்தவர் லட்சு மணன் (வயது 61). இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள சோமநாதர் ஈஸ்வரன் கோவில் குளக்கரையில் நடந்து சென்றார். அப்போது, கால் தவறி குளத்தில் விழுந்தார்.

உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் காவேரிப்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் குளத்தில் இறங்கி லட்சு மணனை மீட்டனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.

லட்சு மணனின் உடலை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.