🎌 1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது.


🚀 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி இன்சாட் தொலைத்தொடர்பு ஏவுகணை ஏவப்பட்டது.

🎬 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஏ.கே.செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்டன.

🏤 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது.

✍ ஜப்பானிய மொழியையும் தமிழ்மொழியையும் ஆராய்ந்து அவற்றுக்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்த சுசுமு ஓனோ 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி டோக்கியோவில் பிறந்தார்.

முக்கிய தினம் :-


சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்


🚫 ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நள்ளிரவுமுதல் 23ஆம் தேதி வரை போராடினர்.

🚫 அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


பிறந்த நாள் :-


டி.எஸ்.பாலையா


🎥 தமிழ்த் திரையுலகின் ஒரு பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

🎥 இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். 1936ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும்.

🎥 இவர் துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.

🎥 கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா 1972ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி தன்னுடைய 57-வது வயதில் மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


கிமு 30 – எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார்.

79 – நெருப்புக்கான உரோமைக் கடவுள் வல்கனின் பண்டிகை நாளில் விசுவியசு மலை வெடித்தது.

406 – புளோரன்சு முற்றுகையின் போது கோத்திக்கு மன்னர் ரடகைசசு உரோமைத் தளபதியினால் கொல்லப்பட்டார். 12,000 "காட்டுமிராண்டிகள் உரோமை இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்கள் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.

634 – அபூபக்கர் மதீனாவில் இறந்தார். முதலாம் உமறு ராசிதீன் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1244 – எருசலேம் முற்றுகை (1244): எருசலேமின் அரணான தாவீதின் கோபுரம் குவாரெசுமியான் பேரரசிடம் வீழ்ந்தது.

1305 – இசுக்காட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் சேர் வில்லியம் வேலசு இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னரால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.

1328 – பிளம்மிய விவசாயிகளின் கிளர்ச்சியை பிரெஞ்சுப் படைகள் அடக்கின.

1382 – தோக்தமிசின் தலைமையில் தங்க நாடோடிக் கூட்டம் மாஸ்கோ நகரை முற்றுகையிட்டது.

1521 – டென்மார்க்கின் இரண்டாம் கிறித்தியான் சுவீடன் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் குசுத்தாவ் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

1541 – பிரெஞ்சு நாடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே கனடாவுக்கான தனது மூன்றாவது பயணத்தில் கியூபெக் நகருக்குக் கிட்டவாகத் தரையிறங்கினார்.

1595 – நீண்ட துருக்கியப் போர்: வலாச்சிய இளவரசர் மைக்கேல் உதுமானிய இராணுவத்தை காலுகாரனி சமரில் சந்தித்து வெற்றி பெற்றார்.

1614 – யூதர்கள் பிராங்க்ஃபுர்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

1628 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு ஜோன் பெல்ட்டன் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.

1655 – சொபோட்டா போரில் சுவீடன் பேரரசு போலந்து-லித்துவேனியாவை வென்றது.

1703 – சுல்தான் இரண்டாம் முஸ்தபா உதுமானியப் பேரரசர் பதவியில் இருந்து கலைக்கப்பட்டார்.

1784 – மேற்கு வட கரொலைனா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை. இந்நாடு 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

1799 – முதலாம் நெப்போலியன் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் எகிப்தில் இருந்து பிரான்சு நோக்கிப் பயணமானான்.

1831 – நாட் டர்னர் தலைமையிலான அடிமைகளின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.

1839 – கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கைக் கைப்பற்றியது. இது பின்னர் முதலாம் அபினிப் போர் என அழைக்கப்பட்டது.

1866 – பிராகா உடன்பாட்டை அடுத்து ஆஸ்திரியா-புருசியப் போர் முடிவுக்கு வந்தது.

1914 – முதலாம் உலகப் போர்: சப்பான் செருமனியுடன் போரை அறிவித்தது.

1921 – பிரித்தானிய வான்படைக் கப்பல் ஆர்-38 இங்கிலாந்தில் மூழ்கியதில் 49 பிரித்தானிய, அமெரிக்கப் படையினரில், நால்வர் மட்டுமே உயிர் தப்பினர்.

1929 – பாலத்தீனத்தில் எபிரோன் நகரில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி அவர்களில் 65 பேரைக் கொன்றனர். ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

1939 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சுடாலின்கிராட் சண்டை ஆரம்பமானது

1943 – இரண்டாம் உலகப் போர்: கார்கீவ் விடுவிக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: மர்சேய் கூட்டுப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா மன்னர் மைக்கேல் நாட்சி-ஆதரவு அரசை ஏற்க மறுத்தார். அரசுத்தலைவர் இயோன் அந்தனெசுக்கு கைது செய்யப்பட்டார். உருமேனியா கூட்டுப் படைகளுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பிரெக்கில்டன் என்ற இடத்தில் உள்ள பாடசாலை மீது மோதியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.

1947 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.

1948 – 44 நாடுகளில் இருந்து 147 திருச்சபைகள் இணைந்து "திருச்சபைகளின் உலகப் பேரவை" என்ற அமைப்பு நிறுவப்பட்டது.

1948 – ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் ஆவணத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.

1966 – "லூனார் ஆர்பிட்டர் 1" விண்கலம் முதல் தடவையாக நிலாவி சுற்றுவட்டத்திருந்து பூமியைப் படம் பிடித்தது.

1973 – சுவீடன், ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை ஒன்று பணயக் கைதிகள் விவகாரமாக உருவெடுத்தது. அடுத்த ஐந்து நாட்களில் பணயக் கைதிகள் கொள்ளைக்காரர்களுக்குப் பரிவு காட்ட ஆரம்பித்தனர். இது "இசுட்டாக்குஃகோம் நோய்க்கூட்டறிகுறி" என்ற சொற்றொடரை உருவாக்கியது.

1989 – பாடல் புரட்சி: எசுத்தோனியா, லாத்வியா லித்துவேனியாவைச் சேர்ந்த இரண்டு மில்லியன் மக்கள் வில்னியஸ்–தாலின் நெடுஞ்சாலையில் கைகோர்த்து பாடல்கள் பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1990 – ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1990 – ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

1990 – மேற்கு, மற்றும் கிழக்கு செருமனி ஆகியன அக்டோபர் 3-இல் இணையவிருப்பதாக அறிவித்தன.

1991 – உலகளாவிய வலை பொது மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.

2000 – கல்ஃப் ஏர் விமானம் பாரசீக வளைகுடாவின் மனாமா அருகே வீழ்ந்ததில் 143 பேர் உயிரிழந்தனர்.

2006 – நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.

2007 – 1918 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட உருசியப் பேரரசின் கடைசி அரச குடும்பத்தினரான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் எச்சங்கள் உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.

2011 – லிபிய உள்நாட்டுப் போர்: லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாஃபி அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தேசிய இடைக்காலப் பேரவை ஆட்சியைக் கைப்பற்றியது.

2013 – பொலிவியாவில் சான்ட்டா குரூசு டெ லா சியேறா நகரில் இடம்பெற்ற சிறைக் கைதிகளின் கலவரத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1740 – ஆறாம் இவான், உருசியப் பேரரசர் (இ. 1764)

1754 – பிரான்சின் பதினாறாம் லூயி (இ. 1793)

1766 – ஒப்மான்செக், செருமானியத் தாவரவியலாளர் இ. 1849

1847 – சாரா பிரான்சிசு வைட்டிங், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1927)

1872 – த. பிரகாசம், ஆந்திராவின் 1வது முதலமைச்சர் (இ. 1957)

1896 – ம. இரா. சம்புநாதன், வடமொழி மறைகள் நான்கையும் தமிழில் மொழிபெயர்த்தவர் (இ. 1974)

1914 – டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1972)

1918 – அன்னா மாணி, இந்திய இயற்பியலாளர் (இ. 2001)

1919 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (இ. 2008)

1923 – பல்ராம் சாக்கர், இந்திய அரசியல்வாதி (இ. 2016)

1940 – தாமசு இசுடைட்சு, அமெரிக்க உயிரியற்பியலாளர்

1943 – நந்தா மாலினி, இலங்கை, சிங்களப் பாடகி

1944 – சாய்ரா பானு, இந்தியத் திரைப்பட நடிகை

1946 – இரா. வை. கனகரத்தினம், இலங்கைத் தமிழ் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் (இ. 2016)

1950 – ரோசா ஒட்டுன்பாயெவா, கிர்கித்தான் அரசுத்தலைவர்

1954 – அலிமா யாகோப்பு, சிங்கப்பூரின் 8-வது குடியரசுத் தலைவர்

1956 – மோகன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1964 – எஸ். ஏ. ராஜ்குமார், தென்னிந்திய இசையமைப்பாளர்

1968 – கே. கே, இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 2022)

1974 – கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்

1974 – ரே பார்க், இசுக்கொட்டிய நடிகர்

இன்றைய இறப்புகள்


93 – அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ், உரோமைத் தளபதி, அரசியல்வாதி (பி. 40)

634 – அபூபக்கர், அரேபியக் காலிபா (பி. 573)

1305 – வில்லியம் வேலசு, இசுக்கொட்டிய இராணுவத் தலைவர் (பி. 1272)

1628 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (பி. 1592)

1806 – சார்லசு-அகஸ்டின் டெ கூலும், பிரான்சு இயற்பியலாளர் (பி. 1736)

1951 – வ. ரா., தமிழக எழுத்தாளர் (பி. 1889)

1973 – திருலோக சீதாராம், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1917)

1976 – மன்னார்குடி பரமசிவம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1929)

1984 – ராசிக் பரீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1893)

1991 – புளோரன்ஸ் பி. சீபர்ட், அமெரிக்க உயிர்வேதியியலாளர் (பி. 1897)

2000 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதி. (பி. 1952)

2010 – இரா. சாரங்கபாணி, தமிழறிஞர் (பி. 1925)

2011 – ஜே. சி. டேனியல், இந்திய இயற்கையியலாளர் (பி. 1927)

2018 – குல்தீப் நய்யார், இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1923)

இன்றைய சிறப்பு நாள்


அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்

இசுட்டாலினிசம் மற்றும் நாட்சியத்தினால் பாதிக்கப்பட்டோர் நினைவு நாள் (ஐரோப்பிய ஒன்றியம்)

பாசிச ஆக்கிரமிப்பு விடுதலை நாள் (உருமேனியா)

தேசிய மருத்துவர்கள் நாள் (ஈரான்)