💉 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இன்சுலினின் கட்டமைப்பு மற்றும் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடரை கண்டுபிடித்த பிரெடெரிக் சேனர் இங்கிலாந்தில் பிறந்தார். 


📺 1888ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த ஜான் லோகி பைர்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். 

👩 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி செவிலியர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் மறைந்தார்.

👉 1917ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டறிந்த எடுவர்டு பூக்னர் மறைந்தார்.

💓 1826ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த ரெனே லென்னக் மறைந்தார்.

🏈 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி 28வது ஒலிம்பிக் விளையாட்டுகள் ஏதென்ஸில் ஆரம்பமாயின. 

📅 கிமு 3114ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது.

💈 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி ஹாரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார்.

🏁 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.


முக்கிய தினம் :-


சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம்

✍ உலகின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

✍ இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்கள் பயன்பாட்டுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முதன்முதலில் 1976ம் ஆண்டு சர்வதேச இடதுகை அமைப்பு அறிவித்தது.


பிறந்த நாள் :-


டி.கே.மூர்த்தி

🎶 தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவனந்தபுரம் - கன்னியாகுமாரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரையில் பிறந்தார். தாணு பாகவதர் கிருஷ;ணமூர்த்தி என்பது இவரின் முழுப்பெயர்.

🎶 சிறுவயதிலிருந்தே இவருக்கு மிருதங்கம் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். தனது ஒன்பது வயதில் ஒரு திருமணத்தில் தவில் வித்துவான் எழுந்துச் சென்றதால் இவர் மிருதங்கம் வாசித்தார்.

🎶 இவரின் திறமையைப் பார்த்து தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர் தன்னோடு சேர்த்துக் கொண்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற பல பிரபலங்களுக்கு வாசித்துள்ளார்.

🎶 மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, சென்னை மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர் இன்று 94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

இன்றைய நிகழ்வுகள்


கிமு 29 – உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான்.

523 – ஒர்மிசுதாசின் இறப்பை அடுத்து முதலாம் யோவான் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

582 – பைசாந்தியப் பேரரசராக மோரிசு பதவியேற்றார்.

1099 – இரண்டாம் அர்பனுக்குப் பின்னர் இரண்டாம் பசுக்கால் 160-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

1516 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு நாப்பொலியையும் பிரான்சின் முதலாம் பிரான்சிசு மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1521 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோட்டெஸ் தலைமையிலான படையினர் அஸ்டெக் தலைநகரைக் கைப்பற்றினர்.

1532 – பிரிட்டனி தன்னாட்சிப் பிரதேசம் பிரான்சுடன் இணைக்கப்பட்டது.

1536 – சப்பானில் கியோத்தோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் அங்குள்ள 21 நிச்சிரன் பௌத்த கோயில்களைத் தீக்கிரையாக்கினர்.

1645 – சுவீடனும் நோர்வேயும் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.

1704 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய மற்றும் உரோமைப் படையினர் பிரெஞ்சுப் படையினரை பிளெனைம் சமரில் வென்றனர்.

1792 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரி என அறிவிக்கப்பட்டார்.

1806 – செர்பியப் புரட்சி: உதுமானியர்களுக்கு எதிரான மிசார் சமர் ஆரம்பமானது. இரண்டு நாட்களில் செர்பியா வெற்றி பெற்றது.

1814 – ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையில் இலண்டனில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி நெப்போலியப் போர்களுக்கு முன்னதாக இருந்த இடச்சுக் குடியேற்றங்கள் அவர்களுக்கே திரும்பத் தரப்பட்டன.

1849 – யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.

1868 – பெருவின் தெற்கே அரிக்கா என்ற இடத்தில் 8.5–9.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 25,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனை அடுத்து நிகழ்ந்த ஆழிப்பேரலையினால் அவாய், நியூசிலாந்து வரை சேதங்கள் ஏற்பட்டன.

1889 – நாணயங்கள் மூலம் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தும் கருவி வில்லியம் கிரே என்பவரால் அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: எசுப்பானிய அமெரிக்கப் படைகள் மணிலாவில் போரில் ஈடுபட்டன. நகரைப் பிலிப்பீனியக் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்க விடாமல், எசுப்பானியத் தளபதி அமெரிக்காவிடம் சரணடைந்தார்.

1898 – 433 ஈரோசு என்ற முதலாவது புவியருகு சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1905 – சுவீடனில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக நோர்வே மக்கள் வாக்களித்தனர்.

1913 – ஹரி பிறியர்லி என்ற ஆங்கிலேயர் துருவேறா எஃகைக் கண்டுபிடித்தார்.

1918 – அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவில் முதல்தடவையாகப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1920 – போலந்து–சோவியத் போர் வார்சாவாவில் ஆரம்பமாயிற்று. ஆகத்து 25 இல் முடிவடைந்த இப்போரில் சோவியத் செஞ்சேனை தோற்றது.

1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சாங்காய் சமர் ஆரம்பமானது.

1954 – பாக்கித்தான் வானொலி பாக்கித்தான் நாட்டுப்பண்ணை முதல் தடவையாக ஒலிபரப்பியது.

1960 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1961 – பனிப்போர்: கிழக்கு செருமனி தனது குடிமக்கள் தப்பிச் செல்லாதவாறு பெர்லினின் கிழக்கு, மேற்கு எல்லையை மூடி பெர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.[2]

1964 – ஐக்கிய இராச்சியத்தில் கடைசித் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1968 – கிரேக்க அரசுத்தலைவர் கியார்கியசு பப்படப்பவுலசு மீது ஏதன்சு நகரில் கொலைமுயற்சி இடம்பெற்றது.

1969 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற அரசியல், மதக் கலவரங்களை அடக்க பிரித்தானியப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

1969 – அப்பல்லோ 11 விண்வெளிவீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தார்கள்.[3]

1978 – லெபனான் உள்நாட்டுப் போரின் இரண்டாம் கட்டமாக பெய்ரூத் நகரில் 150 பாலத்தீனர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

2004 – 156 கொங்கோ துட்சி அகதிகள் புருண்டியில் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 – மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

2004 – 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்சில் ஆரம்பமாயின.

2006 – புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல்: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் 18 பேர் கொல்லப்பட்டனர், 54 பேர் காயமடைந்தனர்.

2008 – உருசியப் படைகள் சியார்சியாவின் கோரி நகரைக் கைப்பற்றின.

2010 – 380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர்கள் என மொத்தம் 492 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் எம்வி சன் சீ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தை வந்தடைந்தது.

2015 – பகுதாது நகரில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர், 212 பேர் காயமடைந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1814 – ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம், சுவீடிய இயற்பியலாளர் (இ. 1874)

1819 – ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ், ஆங்கிலேய-ஐரியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1903)

1888 – ஜான் லோகி பைர்டு, தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய பொறியியலாளர் (இ. 1946)

1899 – ஆல்பிரட் ஹிட்ச்காக், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர் (இ. 1980)

1904 – படி ராஜர்சு, அமெரிக்க நடிகர், இசைக்கலைஞர் (இ. 1999)

1913 – ஸ்ரீபாத பினாகபாணி, ஆந்திரப் பிரதேச மருத்துவர், கருநாடக இசைப்பாடகர் (இ. 2013)

1918 – பிரடெரிக் சேங்கர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 2013)

1924 – டி. கே. மூர்த்தி, தமிழக மிருதங்கக் கலைஞர்

1926 – பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் 15வது அரசுத்தலைவர், புரட்சியாளர் (இ. 2016)

1927 – எஸ். வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (இ. 2009)

1933 – வைஜயந்திமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி

1946 – ஜி. எல். பீரிஸ், இலங்கை அரசியல்வாதி, பேராசிரியர்

1952 – பிரதாப் போத்தன், தென்னிந்திய நடிகர் (இ. 2022)

1963 – ஸ்ரீதேவி, இந்திய நடிகை (இ. 2018)

1979 – ரஞ்சித், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1987 – சிராபந்தி சாட்டர்ஜி, வங்காள-இந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய இறப்புகள்


1795 – அகில்யாபாய் ஓல்கர், இந்தோர் பேரரசி (பி. 1725)

1826 – ரெனே லென்னக், இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த பிரான்சிய மருத்துவர் (பி. 1781)

1907 – எர்மன் கார்ல் வோகல், செருமானிய வானியற்பியலாளர் (பி. 1841)

1910 – புளோரன்ஸ் நைட்டிங்கேல், இத்தாலிய-ஆங்கிலேய இறையியலாளர் (பி. 1820)

1917 – எடுவர்டு பூக்னர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1860)

1936 – பிகாஜி காமா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1861)

1946 – எச். ஜி. வெல்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர், வரலாற்றாளர் (பி. 1866)

1956 – யாக்குப் கோலாசு, பெலருசிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1882)

இன்றைய சிறப்பு நாள்


பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்

விடுதலை நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, பிரான்சிடம் இருந்து 1960)