நிகழ்வுகள் :-


👉 1985ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலையை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார்.

👉 1974ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நியூட்ரானை கண்டுபிடித்த சர் ஜேம்ஸ் சாட்விக் மறைந்தார்.


பிறந்த நாள் :-


அலெக்ஸாண்டர் டூமாஸ்

✍ உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார்.

✍ இவர் தனது 20வது வயதில் பத்திரிகைகளுக்கு கதை எழுத தொடங்கினார். இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல் இருந்ததால், விரைவில் பிரபலமானார்.

✍ 'தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ', 'தி த்ரீ மஸ்கிடேர்ஸ்', 'ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்' ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ்பெற்றன. 

✍ சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் என 1,200 நூல்களை எழுதியுள்ளார்.

✍ எழுத்துலகின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்ஸாண்டர் டூமாஸ் 68வது வயதில் (1870) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


1148 – இரண்டாம் சிலுவைப் போர்: பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி திமிஷ்கு நகரை முற்றுகையிட்டார்.

1304 – இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் இசுக்கொட்லாந்தில்ன் இசுட்டெர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினார்.

1487 – நெதர்லாந்து லீயுவார்டன் நகர மக்கள் வெளிநாட்டு பியர் இறக்குமதித் தடையை எதிர்த்து பணி நிறுத்தம் செய்தனர்.

1567 – இசுக்காட்லாந்தின் அரசி முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஆறாம் ஜேம்சு மன்னனாக்கப்பட்டான்.

1783 – ஜோர்ஜிய இராச்சியம் உருசியாவின் காப்பு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1866 – அமெரிக்க உள்நாட்டுப் போரை அடுத்து டென்னிசி முதலாவது மாநிலமாக மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்தது.

1901 – வங்கி ஒன்றில் களவெடுத்த குற்றச்சாட்டில் ஒகையோ கொலம்பசு நகரில் சிறை வைக்கப்பட்டிருந்த ஓ ஹென்றி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

1911 – பெருவில் இன்காக்களின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி இராம் பிங்கம் கண்டுபிடித்தார்.

1915 – சிகாகோ ஆற்றில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 844 பேர் உயிரிழந்தனர்.

1922 – பாலத்தீனம் தொடர்பான பிரித்தானியக் கட்டளையின் மாதிரி வரைபை உலக நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது 1923 செப்டம்பர் 26 இல் நடைமுறைக்கு வந்தது.

1923 – கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.

1924 – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, கனேடிய விமானங்கள் செருமனியின் ஆம்பர்கு நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர், 280,000 கட்டடங்கள் அழிந்தன.

1959 – மாஸ்கோவில் அமெரிக்க தேசியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்கத் துணைத் தலைவர் ரிச்சார்ட் நிக்சனும் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ்வும் புகழ் பெற்ற அடுப்படி விவாதத்தில் கலந்து கொண்டனர்.

1969 – நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

1977 – லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.

1982 – யப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர் உயிரிழந்தனர்.

1983 – இலங்கையில் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை கலவரங்கள் இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது. ஈழப்போரின் தொடக்கமாக இது கருதப்படுகிறது.

1991 – இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.

1996 – கொழும்பு, தெகிவளையில் அளுத்கமை நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்றில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர்.[1]

2001 – கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.

2007 – லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலத்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.

2013 – எசுப்பானியாவில் விரைவுத் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில், 78 பயணிகள் உயிரிழந்தனர்.

2014 – புர்க்கினா பாசோவில் இருந்து அல்ஜியர்சுக்கு சென்று கொண்டிருந்த ஏர் அல்சீரியா விமானம் 5017 மாலிவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 116 பேரும் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1783 – சிமோன் பொலிவார், வெனிசுவேலாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 1830)

1802 – அலெக்சாண்டர் டூமா, பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1870)

1895 – றொபேட் கிறேவ்ஸ், ஆங்கிலேய-எசுப்பானிய எழுத்தாளர் (இ. 1985)

1897 – அமேலியா ஏர்ஃகாட், அமெரிக்க எழுத்தாளர், விமானி (இ. 1937)

1924 – திருச்சி லோகநாதன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1989)

1930 – கேசுபாய் படேல், குசராத்தின் 10வது முதலமைச்சர்

1932 – தாமரைத்தீவான், ஈழத்து எழுத்தாளார்

1934 – பி. எஸ். சூசைதாசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2017)

1937 – மனோஜ் குமார், இந்திய நடிகர், இயக்குநர்

1938 – ஓ. ஏ. இராமையா, இலங்கைத் தொழிற்சங்கவாதி, பொதுவுடமைவாதி (இ. 2013)

1945 – அசிம் பிரேம்ஜி, இந்தியத் தொழிலதிபர்

1947 – சஹீர் அப்பாஸ், பாக்கித்தானித் துடுப்பாளர்

1953 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)

1965 – டோக் லீமேன், அமெரிக்க இயக்குநர்

1969 – ஜெனிஃபர் லோபஸ், அமெரிக்க நடிகை, பாடகி

1979 – ரோஸ் பைரன், ஆத்திரேலிய நடிகை

1981 – டக் பொலிஞ்சர், ஆத்திரேலியத் துடுப்பாளர்

1982 – அண்ணா பகுய்ன், கனடிய-நியூசிலாந்து நடிகை

இன்றைய இறப்புகள் 


1862 – மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (பி. 1782)

1951 – ஐ. எக்ஸ். பெரைரா, இலங்கை, மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1988)

1974 – ஜேம்ஸ் சாட்விக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1891)

1991 – ஐசக் பாஷவிஸ் சிங்கர், நோபல் பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1902)

2012 – ஜோன் அட்டா மில்ஸ், கானாவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1944)

2013 – காரி டேவிஸ், அமெரிக்க விமானி, செயற்பாட்டாளர் (பி. 1921)

2017 – உடுப்பி ராமச்சந்திர ராவ், இந்திய இயற்பியலாளர் (பி. 1932)

2017 – யஷ் பால், இந்திய இயற்பியலாளர் (பி. 1926)

இன்றைய சிறப்பு நாள்


காவல்துறையினர் நாள் (போலந்து)