🎾 1968ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பூனாவில் பிறந்தார். 


🎼 2009ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் மறைந்தார். 

✍ 1930ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி எத்யோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை வெளியிட்டது.

🏡 1955ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி டிஸ்னிலாந்து பூங்கா கலிஃபோர்னியாவில் அமைக்கப்பட்டது.

✍ 1965ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி பிரான்ஸையும், இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.

🏡 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி மிலேனியம் பூங்கா சிகாகோவில் அமைக்கப்பட்டது. 

📜 1661ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் சுவீடனில் வெளியிடப்பட்டது.


பிறந்த நாள் :-


அருணா ஆசஃப் அலி


🏁 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali) 1909ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஹரியானா மாநிலம் கால்கா நகரில் (அப்போது பஞ்சாப் மாநிலம்) பிறந்தார்.

🏁 இவர் சிறு வயதில் இருந்தே சுதந்திர வேட்கையும், துணிவும் கொண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.

🏁 1958-ல் டெல்லியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார். மாநகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அமைதிக்கான லெனின் பரிசும், 1992-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

🏁 நாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட அருணா ஆசஃப் அலி 87வது வயதில் (1996) மறைந்தார். அவருக்கு 1998-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


ஃபிரிட்ஸ் ஜெர்னிகி


🔭 ஃபேஸ் கான்ட்ரஸ்ட் மைக்ரோஸ்கோப்பை (Phase-contrast microscopy) கண்டுபிடித்த ஃபிரிட்ஸ் ஜெர்னிகி (Frits Zernike) 1888ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் பிறந்தார்.

🔭 இவர் கண்ணாடி, கண்ணாடி கற்கள், வண்ணப் புகைப்படக்களம், டெலஸ்கோப் கண்ணாடிகளின் பிழைகள், பார்வைத் திறன் குறித்த ஆய்வில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

🔭 தனது ஆராய்ச்சிகள் மூலம் புகைப்பட கேமரா, சிறிய வானியல் கண்காணிப்பு கருவி உள்ளிட்டவற்றை உருவாக்கினார். தன் மாணவர்களுடன் இணைந்து, லென்ஸ் முறைகளின் பிறழ்ச்சிகளால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.

🔭 இவர் 1953-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஃபிரிட்ஸ் ஜெர்னிகி 78வது வயதில் (1966) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


622 – முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும்.

997 – கிரேக்கத்தில் இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான பல்கேரியப் படையினரை பைசாந்திய இராணுவத்தினர் தோற்கடித்தனர்.

1054 – திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது.

1232 – எசுப்பானியாவின் அர்சோனா நகரம் விடுதலையை அறிவித்து, முகம்மது இப்னு யூசுப் என்பவரை ஆட்சியாளராக்கியது.

1377 – இங்கிலாந்தின் அரசராக இரண்டாம் ரிச்சார்டு முடிசூடினார்.

1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித்தாள்கள் சுவீடன் வங்கியினால் வெளியிடப்பட்டன.

1790 – கொலம்பியா மாவட்டம் அமெரிக்காவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

1809 – லா பாஸ் (இன்றைய பொலிவியாவில்) எசுப்பானிய முடியாட்சியில் இருந்து விடுதலையை அறிவித்தது. எசுப்பானிய அமெரிக்காவின் முதலாவது தனிநாடு பெதுரோ டொமிங்கோ முரில்லோ தலைமையில் அமைக்கப்பட்டது.

1849 – காத்தலோனியாவில் அந்தோனி மரிய கிளாரட் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை (இன்றைய கிளரீசியன் அமைப்பு) நிறுவினார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கனின் உத்தரவின் பேரில், அமெரிக்க ஒன்றியப் படைகள் வர்ஜீனியாவினுள் 25-மைல்கள் தூரம் அணிவகுத்துச் சென்றன.

1931 – எத்தியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் முதலாம் ஹைலி செலாசி வெளியிட்டார்.

1942 – பெரும் இன அழிப்பு: பிரெஞ்சு அரசு பாரிசில் உள்ள அனைத்து 13,152 யூதர்களையும் கைது செய்து அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்பக் காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.

1945 – மன்காட்டன் திட்டம்: ஐக்கிய அமெரிக்கா புளுட்டோனியம்-கொண்ட அணுக்கரு ஆயுதங்களை நியூ மெக்சிகோ, அலமொகோர்தோ என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதித்தது.

1948 – 1948 அரபு - இசுரேல் போர்: இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாசரேத்து நகரத்தை இசுரேல் ஆக்கிரமித்தது.

1950 – உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவே பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

1950 – கொரியப் போர்: அமெரிக்கப் போர்க் கைதிகள் 31 பேர் வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1951 – பெல்ஜியம் மன்னர் மூன்றாம் லியோபோல்ட் முடிதுறந்ததை அடுத்து, அவரது மகன் முதலாம் பாடோயின் புதிய மன்னராகப் பதவியேற்றார்.

1965 – பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

1969 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 11, நிலாவில் தரையிறங்க முதலாவது மனிதரை ஏற்றிக் கொண்டு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டது.

1979 – ஈராக்கிய அரசுத்தலைவர் அசன் அல்-பாக்கிர் பதவி துறந்ததை அடுத்து சதாம் உசேன் தலைவரானார்.

1983 – சில்லி தீவுகளில் பிரித்தானியாவின் உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

1989 – புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990 – பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,621 பேர் உயிரிழந்தனர்.

1990 – உக்ரைன் சோவியத் குடியரசின் நிலத்துக்கு அக்குடியரசின் நாடாளுமன்றம் உரிமை கோரியது.

1995 – காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

1999 – ஜான் எஃப். கென்னடியின் மகனும், மனைவியும் அத்திலாந்திக்குப் பகுதியில் மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் அருகே விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.

2004 – தமிழ்நாடு கும்பகோணத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.

2004 – மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

2006 – தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் உயிரிழந்தனர்.

2013 – கிழக்கிந்தியாவின் பிகார் மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் நஞ்சு கலந்த மதிய உணவுண்ட 27 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1194 – அசிசியின் புனித கிளாரா, இத்தாலியப் புனிதர் (இ. 1253)

1746 – கியூசெப்பே பியாசி, இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியார், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1826)

1872 – ருவால் அமுன்சென், நோர்வேஜிய விமான ஓட்டி, நாடு-காண் பயணி (இ. 1928)

1888 – பிரிட்சு ஜெர்னிகி, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1966)

1896 – திறிகுவே இலீ, ஐநாவின் 1வது பொதுச் செயலர் (இ. 1968)

1907 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1963)

1909 – அருணா ஆசஃப் அலி, இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர் (இ. 1996)

1936 – யாசுவோ ஃபுக்குடா, சப்பானின் 91வது பிரதமர்

1936 – வெங்கட்ராமன் சுப்ரமணியம், இந்திய-ஆத்திரேலியத் துடுப்பாளர்

1942 – மார்கரெட் கோர்ட், ஆத்திரேலிய டென்னிசு வீராங்கனை

1947 – சிவகங்கை இராசேந்திரன், இந்தி எதிர்ப்புப் போராளி (இ. 1965)

1968 – தன்ராஜ் பிள்ளை, இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்

1968 – லாரி சாங்கர், அமெரிக்க மெய்யியலாளர், விக்கிப்பீடியா நிறுவனர்களில் ஒருவர்

1973 – ஷான் பொலொக், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்

1984 – கத்ரீனா கைஃப், பிரித்தானிய-இந்திய நடிகை

1989 – கேரத் பேல், வெல்சிய கால்பந்தாட்டக் காரர்

1989 – கிம் வூ-பின், தென்கொரிய நடிகர்

1990 – ஜேம்ஸ் மாஸ்லொவ், அமெரிக்க நடிகர்

இன்றைய இறப்புகள்


1764 – உருசியாவின் ஆறாம் இவான், இரசியப் பேரரசர் (பி. 1740)

1890 – வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர், பிரித்தானிய வழக்கறிஞர், கல்வியாளர் (பி. 1825)

1916 – இலியா மெச்னிகோவ், உருசிய விலங்கியலாளர் (பி. 1845)

1989 – உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்

2009 – டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)

2012 – இசுடீபன் கோவே, அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1932)

2013 – பருண் டே, இந்திய வரலாற்றாய்வாளர், கல்வியாளர் (பி. 1932)

இன்றைய சிறப்பு நாள்தொகு


பெரும் இன அழிப்பு நினைவு நாள் (பிரான்சு)