✍ 1885ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்முறையாக கதிரியக்க ஐசோடோப்புகளை குறியீடுகளாக பயன்படுத்திய ஜியார்ஜ் டி கிவிசி ஹங்கேரியில் பிறந்தார். 

🏁 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய அரசியல் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மறைந்தார்.

🔷 1774ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

🚜 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

🚫 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தந்தை பெரியார், தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.


முக்கிய தினம் :-


உலக சாரணர் தினம்

👮 ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூறும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. 

👮 1907ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 

👮 பொதுவாக சில நாடுகளில் ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும்.


உலக தாய்ப்பால் தினம்

🍼 இன்று உலக தாய்ப்பால் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


நினைவு நாள் :-


பால கங்காதர திலகர்

👉 விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் 1856ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.

👉 இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார்.

👉 ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். பல விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர், 1908லிருந்து 1914 வரை சிறையில் இருந்தார்.

👉 முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் தன்னுடைய 64வது வயதில் 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


டைகர் வரதாச்சாரியார்

🎻 கர்நாடக இசைப்பாடகர் டைகர் வரதாச்சாரியார் 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் பிறந்தார்.

🎻 இவர் தன்னுடைய 14-வது வயதில் சகோதரர்களுடன் சேர்ந்து முறைப்படி இசை பயின்றார். இவர்கள் காலடிப்பேட்டை சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர்.

🎻 மைசூர் நவராத்திரி விழாவில் பாடிய போது இவர் பாடிய பல்லவியைக் கேட்ட மைசூர் மகாராஜா டைகர் என்ற பட்டத்தை சூட்டி, இவரை அரண்மனை ஆஸ்தான பாடகராக அமர்த்தினார்.

🎻 சென்னை மியூசிக் அகாடமியின் ஆசிரியர்களுக்கான இசைக் கல்லூரி (டீச்சர்ஸ் காலேஜ் ஆஃப் மியூசிக்) முதல்வராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். பல பாடல்களை இயற்றி மெட்டு அமைத்துள்ளார்.

🎻 இவருக்கு 1932-ல் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைக்கு பெருமை சேர்த்த இவர் தனது 73-வது வயதில் மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


கிமு 30 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.

527 – முதலாம் ஜஸ்டீனியன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.

1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1498 – கிறித்தோபர் கொலம்பசு வெனிசுவேலாவில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார்.

1571 – உதுமானியப் பேரரசு சைப்பிரசைக் கைப்பற்றியது.

1664 – உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன.

1714 – அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் முடிசூடினார்.

1759 – ஏழாண்டுப் போர்: மின்டென் சமரில் ஆங்கிலோ-செருமனியக் கூட்டுப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.

1774 – பிரித்தானிய அறிவியலாளர் சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசன் வளிமத்தைக் கண்டுபிடித்து, செருமன்-சுவீடிய வேதியலாளர் காரல் வில்லெம் சீலெயின் முந்தைய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.

1800 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.

1801 – அமெரிக்கப் பாய்க்கப்பல் என்டர்பிரைசு லிபியாவில் திரிப்போலி என்ற பாய்க்கப்பலைக் கைப்பற்றியது.

1834 – பிரித்தானியப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1867 – பிரித்தானிய இலங்கையில் கண்டிக்கும் கொழும்புக்கும் இடையே தொடருந்துப் போக்குவரத்து பொதுமக்களுக்கு ஆரம்பிக்கப்பட்டது.[1]

1876 – கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

1894 – சப்பானுக்கும் சிங் சீனாவுக்கும் கொரியா தொடர்பான முதலாம் சீன சப்பானியப் போர் தொடங்கியது.

1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகத்து 9 வரை நீடித்தது.

1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் பேரரசு உருசியப் பேரரசு மீது போரை ஆரம்பித்தது.

1914 – இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.[2]

1927 – சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் குவோமின்டாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

1933 – பாசிசத்துக்கு எதிரான செயற்பாட்டளர்கள் நால்வர் செருமனி, ஆம்பர்கில் தூக்கிலிடப்பட்டனர்.

1936 – பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்களை இட்லர் ஆரம்பித்து வைத்தார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் வார்சாவா நகரில் நாட்சி ஜெர்மனிக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

1946 – நாட்சி ஜெர்மனியுடன் உறவு வைத்திருந்த உருசிய விடுதலை இராணுவப் படையினர், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மாஸ்கோவில் தூக்கிலிடப்பட்டனர்.

1950 – குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.[3]

1952 – தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.

1960 – பெனின் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1960 – பாக்கித்தான் நடுவண் அரசின் தலைநகராக இசுலாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1966 – டெக்சாசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

1968 – புரூணையின் 29வது சுல்தானாக அசனல் போல்கியா முடிசூடினார்.

1974 – சைப்பிரசை இரண்டு வலயங்களாகப் பிரிக்க ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை அனுமதி வழங்கியது.

1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

1988 – இலண்டனில் இராணுவ முகாம் ஒன்றின் மீது ஐரியக் குடியரசுப் படையினர் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார்.[4]

2004 – பரகுவை தலைநகர் அசுன்சியோனில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் உயிரிழந்தனர், 500 பேர் காயமடைந்தனர்.

2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2007 – அமெரிக்காவில் மினியாபோலிசில் மிசிசிப்பி ஆற்றின் குறுக்கே அமைந்த பாலம் ஒன்று வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர்.

2008 – உலகின் மிக வேகமான தொடருந்து சேவை சீனாவில் பெய்ஜிங், தியான்ஜின் ஆகிய நகரங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.

2008 – உலகின் இரண்டாவது பெரிய மலையான கே-2 கொடுமுடியில் 11 பன்னாட்டு மலையேறிகள் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


கிமு 10 – குளோடியசு, உரோமைப் பேரரசர் (இ. 54)

1744 – ஜீன் பாப்தித்தே லாமார்க், பிரான்சிய உயிரியலாளர், போர்வீரர் (இ. 1829)

1782 – இயூஜின் டி மசெனோ, பிரெஞ்சு கத்தோலிக்கப் புனிதர் (இ. 1861)

1818 – மரியா மிட்செல், அமெரிக்க வானியலாளர் (இ. 1889)

1819 – ஏர்மன் மெல்வில், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1891)

1837 – மேரி ஹாரிசு ஜோன்சு, ஐரிய-அமெரிக்கத் தொழிற்சங்கவாதி (இ. 1930)

1876 – டைகர் வரதாச்சாரியார், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1950)

1881 – கா. சூரன், ஈழத்து சைவப் பெரியார் (இ. 1956)

1882 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1962)

1885 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (இ. 1966)

1899 – கமலா நேரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)

1905 – எலன் சாயர் கோகு, அமெரிக்க-கனடிய வானியலாளர் (இ. 1993)

1907 – மறை. திருநாவுக்கரசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1983)

1910 – கேர்டா டேரோ, செருமானிய புகைப்படக் கலைஞர் (இ. 1937]])

1910 – முகமது நிசார், இந்தியத் துடுப்பாளர் (இ. 1963)

1924 – சவூதி அரேபியாவின் அப்துல்லா (இ. 2015)

1929 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிய அரசியல்வாதி (இ. 1979)

1930 – பியரே பூர்டோ, பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (இ. 2002)

1932 – மீனாகுமாரி, இந்திய நடிகை (இ. 1972)

1934 – குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், இலங்கை ஆவண அறிஞர், தமிழார்வலர், எழுத்தாளர் (இ. 2016)

1935 – சோக்கல்லோ சண்முகநாதன், இலங்கை மேடை நாடக, வில்லுப்பாட்டு கலைஞர்

1944 – டெல்லி கணேஷ், தமிழகத் திரைப்பட, நாடக நடிகர்

1946 – குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்

1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கித்தானின் 2வது அரசுத்தலைவர்

1952 – வி. ராதாகிருஷ்ணன், இலங்கை மலையக அரசியல்வாதி

1967 – ஜோஸ் பாடில்கா, பிரேசில் இயக்குநர்

1969 – கிரகாம் தோர்ப், ஆங்கிலேயத் துடுப்பாளர்

1984 – பாஸ்தியான் இசுவைன்சுடைகர், செருமன் கால்பந்தாட்ட வீரர்

1987 – டாப்சி பன்னு, இந்திய நடிகை

இன்றைய இறப்புகள்


1714 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (பி. 1665)

1787 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலியப் புனிதர் (பி. 1696)

1868 – பீட்டர் ஜூலியன் ஐமார்ட், பிரெஞ்சு கத்தோலிக்க குரு (பி. 1811)

1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)

1944 – மானுவல் எல். குவிசோன், பிலிப்பீனின்2வது அரசுத்தலைவர் (பி. 1878)

1967 – ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1900)

1974 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1908)

1982 – தா. திருநாவுக்கரசு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1933)

1999 – நீரத் சந்திர சவுத்ரி, வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர் (பி. 1897)

1999 – கல்யாண் குமார், தென்னிந்திய திரைப்பட நடிகர் (பி. 1928)

2008 – ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய அரசியல்வாதி (பி. 1916)

2009 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11வது அரசுத்தலைவர் (பி. 1933)

2020 – எம். எஸ். செல்லச்சாமி, இலங்கை அரசியல்வாதி (பி. 1926)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (பெனின், பிரான்சிடம் இருந்து 1960)

வெற்றி நாள் (கம்போடியா, லாவோஸ், வியட்நாம்)

தேசிய நாள் (சுவிட்சர்லாந்து, 1291)