✍ 1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி பிறந்தார்.


நினைவு நாள் :-


வில்லியம் கோல்டிங்

👉இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியரும், கவிஞருமான சர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங் 1911ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியில் உள்ள நியூகி நகரில் பிறந்தார்.

👉இவர் பல கதை, கட்டுரைகளை எழுதினார். இவரது படைப்புகள் பல முறை நிராகரிக்கப்பட்டாலும், மனம் தளராமல் தொடர்ந்து எழுதினார்.

👉இவர் லார்டு ஆஃப் தி ப்ளைஸ் என்ற நாவலை 1954-ல் எழுதினார். நன்மை, தீமை இரண்டுக்கும் இடையேயான மனிதனின் உள்முகப் போராட்டங்கள் குறித்த இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமடைந்து, மாபெரும் வெற்றி பெற்றது.

👉'ரைட்ஸ் ஆஃப் பேஸேஜ்' நாவலுக்காக 1980-ல் புக்கர் பரிசு பெற்றார். பல விருதுகள், கௌரவங்களைப் பெற்ற இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 73 வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1988ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.

👉சிறுகதை, நாடகம், கட்டுரை, விமர்சனம் என பலவிதமான வெற்றிப் படைப்புகளைத் தந்த வில்லியம் கோல்டிங் தனது 82வது வயதில் 1993ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


பிளைஸ் பாஸ்கல்

👉 உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளர் பிளைஸ் பாஸ்கல் (Blaise Pascal) 1623ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிரான்ஸின் கிளர்மான்ட் நகரில் பிறந்தார்.

👉 இவர் கணிதத்தில் அளவுகடந்த ஆர்வம் உடையவர். முக்கோணங்கள் குறித்து பல விதிகளை உருவாக்கினார். தனது 16வது வயதில் முதல் ஆராய்ச்சி நூலில் கூம்பு வெட்டுகளைப் (Essay on Conics) பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். அதில் அவர் விவரித்த புதிய தேற்றம், பாஸ்கல் தேற்றம் என்று தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. 

👉 1642-ல் தந்தைக்கு அலுவலக கணக்கு போடுவதற்கு உதவியாக, கணக்கு போடும் இயந்திரத்தை உருவாக்கி தந்தார். மேலும், இவர் முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார். 

👉 நிகழ்தகவு கோட்பாடு, பாஸ்கல் விதி, பாய்ம இயக்கவியல் விதி ஆகியவற்றை கண்டறிந்தார். இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் ளுஐ அலகிற்கு பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

👉 தனது தன்னம்பிக்கையால் விடாமுயற்சியுடன் சாதனை படைத்த பிளைஸ் பாஸ்கல் 39வது வயதில் (1662) மறைந்தார்.


சல்மான் ருஷ்டி

✍ உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளர் சர் அகமது சல்மான் ருஷ்டி (Sir Ahmed Salman Rushdie) 1947ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

✍ 1981-ல் வெளிவந்த இவரது 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்'(Midnight's Children) புதினம் உலகளவில் பிரபலமாகி, புக்கர் பரிசையும் (Booker Prize) வென்றது. 

✍ இவர் இந்தியச் சூழலில் தனது படைப்புகளை உருவாக்குபவர். 1988-ல் இவர் 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்ற நூலை வெளியிட்டார். இவருக்கு இலக்கிய சேவைகளுக்காக 2007-ல் (Knight Bachelor) என்ற 'சர்' பட்டம் வழங்கப்பட்டது. 

✍ 1945-க்குப் பிறகு உள்ள 50 தலைசிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இவருக்கு 13வது இடத்தை 'தி டைம்ஸ்' நாளிதழ் வழங்கியது. 2005-ல் இவரது 'ஷாலிமார் தி கிளவுன்' நாவலுக்கு இந்தியாவின் மதிப்புமிக்க 'ஹட்ச் கிராஸ்வேர்டு புக்' விருது கிடைத்தது.

✍ உலகம் முழுவதும் பல்வேறு கௌரவமிக்க விருதுகளைப் பெற்ற இவர் தனது 71வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 


இன்றைய தின நிகழ்வுகள்


325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது.

1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார்.

1306 – பெம்புரோக் பிரபுவின் படைகள் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை மெத்வென் சமரில் தோற்கடித்தன.

1586 – வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் தோல்வியடைந்ததை அடுத்து ஆங்கிலேயக் குடியேறிகள் ரோனோக் தீவில் இருந்து வெளியேறினர்.

1850 – நெதர்லாந்து இளவரசி லூயீசு சுவீடன்-நோர்வேயின் பிற்கால மன்னர் இலவரசர் கார்லை மணந்தார்.

1862 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது.

1867 – மெக்சிகோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

1875 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக எர்செகோவினா எழுச்சி ஆரம்பமானது.

1903 – பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக பெனிட்டோ முசோலினி பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டார்.

1910 – அமெரிக்காவில் வாசிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

1943 – டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவுக்கும் சப்பானுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் இடம்பெற்றது.

1949 – முதலாவது தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி இடம்பெற்றது.

1953 – பனிப்போர்: அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு யூலியசு, எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1961 – குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1964 – மனித உரிமைகள் சட்டம் அமெரிக்க மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1985 – மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் சல்வடோர் படையினராக வேடமிட்டு சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

1987 – எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1988 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.

1990 – உருசிய-சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1991 – அங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

2007 – பக்தாதில் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர், 218 பேர் காயமடைந்தனர்.

2009 – வடமேற்குப் பாக்கித்தானில் தாலிபான்களுக்கு எதிரான இரா-கி-நிசாத் இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.

2012 – விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். 2019 இல் கைது செய்யப்படும் வரை அங்கேயே அவர் தங்கியிருந்தார்.

இன்றைய தின பிறப்புகள்


1566 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (இ. 1625)

1595 – குரு அர்கோவிந்த், 6வது சீக்கிய குரு (இ. 1644)

1623 – பிலைசு பாஸ்கல், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1662)

1861 – ஒசே ரிசால், பிலிப்பீனிய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1896)

1906 – எர்னஸ்ட் செயின், செருமானிய-பிரித்தானிய உயிர் வேதியியலாளர் (இ.1979)

1911 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் 2வது பிரதமர் (இ. 1973)

1918 – கே. சி. நடராஜா, இலங்கை குற்றவியல் சட்டவறிஞர்

1925 – ஜெகசிற்பியன், தமிழக எழுத்தாளர் (இ. 1978)

1928 – ப. கிருட்டிணமூர்த்தி, இந்திய திராவிட மொழியியல் ஆய்வாளர் (இ. 2012)

1935 – சு. ப. திண்ணப்பன், தமிழக-சிங்கப்பூர் தமிழறிஞர்

1945 – ரதொவான் கராட்சிச், செர்பிய-பொசுனிய அரசியல்வாதி, போர்க் குற்றவாளி

1945 – ஆங் சான் சூச்சி, நோபல் பரிசு பெற்ற பர்மிய அரசியல்வாதி

1945 – டோபியாஸ் உல்ஃப், அமெரிக்க எழுத்தாளர்

1946 – மா. சந்திரமூர்த்தி, தமிழக எழுத்தாளர்

1947 – சல்மான் ருஷ்டி, இந்திய-ஆங்கிலேய எழுத்தாளர்

1951 – ஐமன் அழ்-ழவாகிரி, எகிப்திய மெய்யியலாளர், தீவிரவாதி

1959 – கிரிஸ்டியன் உல்ஃப், செருமானிய அரசியல்வாதி

1960 – லெப்டினன்ட் சங்கர், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1982)

1961 – வித்யா தேவி பண்டாரி, நேபாளத்தின் 2வது குடியரசுத் தலைவர்

1970 – ராகுல் காந்தி, இந்திய அரசியல்வாதி

1980 – நாகை ஸ்ரீராம், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 2022)

1985 – காஜல் அகர்வால், இந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்


1720 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய மீகாமன் (பி. 1641)

1747 – நாதிர் ஷா, ஈரானிய அரசர் (பி. 1688)

1867 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிகோ மன்னர் (பி. 1832)

1990 – க. யோகசங்கரி, இலங்கைப் போராளி, அரசியல்வாதி

1990 – க. பத்மநாபா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நிறுவனர் (பி. 1951)

1993 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1911)

2012 – ராபின் மெக்கிலாசன், ஆங்கிலேயத் தமிழறிஞர், கிரேக்க செவ்வியல் அறிஞர்

2013 – ஜேம்ஸ் கண்டோல்பினி, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1961)

2016 – குமரகுருபரன், தமிழகக் கவிஞர் (பி. 1974)

2020 – ஏ. எல். ராகவன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1933)

இன்றைய தின சிறப்பு நாள்


விடுதலை நாள் (அங்கேரி)

தொழிலாளர் தினம் (டிரினிடாட் மற்றும் டொபாகோ)