வாலாஜாபேட்டை விவேகானந்தர் தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வாலாஜா போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஹேமந்த்குமார் (வயது 31). என்பவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது.

அவரை பிடித்து விசாரணை நடத்திய போது ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அதனை இருசக்கர வாகனத்தில் வைத்து வாலாஜா அடுத்த சாத் தம்பாக்கம் கிராம ஏரிக்கரை யோரம் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது.

பின்னர் ஹேமந்த் குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.