👉 1782ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல்முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்.


👉 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளை நிறுவிய ராம.அழகப்பச் செட்டியார் மறைந்தார்.


முக்கிய தினம் :-


தேசிய கடல்சார் தினம்

🌟 இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கப்பல் துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌟 இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) 1919ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதனை நினைவுக்கூறும் வகையில் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி முதல்முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.


பிறந்த நாள் :-


ஜோசப் லிஸ்டர்

💉 அறுவை சிகிச்சையின் தந்தை, ஜோசப் லிஸ்டர் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி இங்கிலாந்தின் அப்டான் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை நவீன உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் ஆவார்.

💉 இவர் லூயிஸ் பாஸ்டர் எழுதிய நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பற்றிய கட்டுரையை படித்தார். அதில் பொருட்களை புளிக்கச் செய்யும் கிருமிகள் காற்றில் உள்ளன. அதனால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது என்பதை அறிந்தார்.

💉 அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நுண்கிருமிகளை அழிக்க முடியும் என ஆய்வு செய்து கண்டறிந்தார்.

💉 தற்போது பினாயில் என்றழைக்கப்படும் கார்பாலிக் அமிலத்தால் கருவிகளை சுத்திகரிக்க முடியும் என்பதை அறிந்தார். இவர் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையை உருவாக்கினார்.

💉 மருத்துவ உலகிலேயே முதன்முதலாக இவருக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்பட்டது. இவர் ஏராளமான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகளையும் பெற்றார்.

💉 அறுவை சிகிச்சையின் முன்னோடி எனப் போற்றப்படும் ஜோசப் லிஸ்டர் தனது 84வது வயதில் (1912) மறைந்தார்.


ஜெகசீவன்ராம்

👉 இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஜெகசீவன்ராம் 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் பிறந்தார்.

👉 தீண்டத்தகாத சாதியில் பிறந்ததால் அவருக்குத் தனியாகக் குடிநீர்ப் பானை பள்ளியில் வைக்கப்பட்டது. இதை சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்று போராடினார். இறுதியில் வெற்றி பெற்றார்.

👉 இவர் நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். 1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்.

👉 பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் தன்னுடைய 78வது வயதில் (1986) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


823 – திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார்.

1081 – முதலாம் அலெக்சியோசு கொம்னேனொசு பைசாந்தியப் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகரில் முடிசூடினார்.

1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் பெண் போக்கஹொண்டாசு ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.

1654 – ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.

1710 – ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது.

1722 – டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார்.

1792 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

1795 – பிரான்சுக்கும், புருசியாவுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1804 – முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.

1818 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெர்னார்டோ ஓ’இகின்சு தலைமையில் சிலியின் விடுதலை இயக்கம் வெற்றி கண்டது. 2,000 எசுப்பானியர்களும், 1000 சிலியர்களும் உயிரிழந்தனர்.

1867 – இலங்கையில் முதலாவது சுற்றுலாப் பயண தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.[1]

1879 – பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.

1897 – கிரேக்கத்துக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.

1900 – கிரீட்டில் தொல்லியலாளர்கள் சித்திர எழுத்துகளுடன் கூடிய பெருந்தொகையான களிமண் பலகைகளைக் கண்டுபிடித்தனர்.

1930 – மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார்.

1932 – பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.

1932 – நியூபவுன்லாந்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கலவரக்காரர்கள் கொலோனியல் கட்டிடத்தைக் கைப்பற்றினர்.

1936 – மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் உயிரிழந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் போர்க்கப்பல்கள் உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையைத் தாக்கின. தென்மேற்குப் பகுதியில் கோர்ன்வால், டோர்செட்சயர் என்னும் இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெல்ஜியத்தின் மீது தவறுதலாக குண்டுகளை வீசியதில் 209 சிறுவர்கள் உட்பட 900 பேர் கொல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் செருமனியரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1945 – பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அரசுத்தலைவர் யோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.

1946 – 11 மாதங்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகின.

1949 – அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.

1951 – இலங்கை,கட்டுநாயக்காவில் 34 பேருடன் சென்ற பிரித்தானிய வான்படை ஏசுட்டிங்சு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானது. உயிரிழப்புகள் இல்லை.[2]

1956 – கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார்.

1956 – இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.

1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

1964 – பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1969 – வியட்நாம் போர்: அமெரிக்க நகரங்களில் போருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

1971 – இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

1976 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

1981 – தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

1991 – அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் அத்திலாந்திக் ஏர்லைன்சு வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் விண்வெளி வீரர் சொன்னி கார்ட்டர் உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.

1992 – பெருவின் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி நாடாளுமன்றத்தை இராணுவ உதவியுடன் கலைத்தார்.

1998 – அகாசி கைக்ஜோ, உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், சப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.

2009 – வட கொரியா சர்ச்சைக்குரிய தனது குவாங்மியோங்சொன்-2 என்ற ஏவுகணையை யப்பான் மீதாக ஏவியது.

2010 – மேற்கு வர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் சிக்கி 29 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1568 – எட்டாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1644)

1588 – தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1679)

1827 – ஜோசப் லிஸ்டர், ஆங்கிலேய மருத்துவர் (இ. 1912)

1879 – ஆர்தர் பெரிடேல் கீத்து, இசுக்காட்லாந்து இந்தியவியலாளர் (இ. 1944)

1900 – ஸ்பென்சர் ட்ரேசி, அமெரிக்க நடிகர் (இ. 1967)

1901 – சு. சி. பிள்ளை, இந்தியக் கணிதவியலாளர் (இ. 1950)

1908 – ஜெகசீவன்ராம், இந்தியாவின் 4வது துணைப் பிரதமர் (இ. 1986)

1916 – கிரிகோரி பெக், அமெரிக்க நடிகர், அரசியல் செயற்பாட்டாளர் (இ. 2003)

1919 – லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், இலங்கைத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2018)

1920 – ஆர்தர் ஹெய்லி, ஆங்கிலேய-கனடியப் போர் வீரர், எழுத்தாளர் (இ. 2004)

1923 – எம். சாரதா மேனன், இந்திய மனநல மருத்துவர்

1933 – க. கைலாசபதி, இலங்கை தமிழறிஞர், கல்வியாளர், ஊடகவியலாளர் (இ. 1982)

1935 – டொனால்டு இலிண்டன்-பெல், ஆங்கிலேய வானியலாளர்

1937 – ஜோசப் லெலிவெல்ட், அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர்

1947 – குளோரியா மகபகல்-அர்ரொயோ, பிலிப்பீன்சின் 14வது அரசுத்தலைவர்

1958 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (இ. 2009)

1989 – லில்லி ஜேம்ஸ், ஆங்கிலேய நடிகை

இன்றைய தின இறப்புகள்


1916 – மக்சிம் கோவலவ்சுகி, உருசிய சமூகவியலாளர் (பி. 1851)

1956 – மணிலால் காந்தி, இந்திய ஊடகவியலாளர், காந்தியவாதி (பி. 1892)

1957 – ராம. அழகப்பச் செட்டியார், இந்திய தொழிலதிபர் (பி. 1909)

1962 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1911)

1964 – டக்ளசு மக்கார்த்தர், அமெரிக்கப் படைத்துறைத் தளபதி (பி. 1880)

1967 – ஹெர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1890)

1975 – சங் கை செக், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1887)

1976 – அங்கையன் கைலாசநாதன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1946)

1976 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்க பொறியியலாளர், இயக்குநர் (பி. 1905)

1977 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதையாசிரியர், வசனகர்த்தா (பி. 1928)

1992 – சாம் வோல்ற்றன், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1918)

1993 – திவ்யா பாரதி, இந்திய நடிகை (பி. 1974)

1994 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (பி. 1967)

1997 – அக்லிலு லெம்மா, எத்தியோப்பிய உயிரியலாளர்

2008 – சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்கநடிகர், இயக்குநர், செயற்பாட்டாளர் (பி. 1923)

இன்றைய தின சிறப்பு நாள்


குழந்தைகள் நாள் (பாலத்தீனம்)