👉 1976ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இந்திய டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோயம்புத்தூரில் பிறந்தார்.

👉 1864ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.

👉 1944ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வங்காள இந்தியத் திரைப்பட நடிகை, ஷர்மிளா தாகூர் பிறந்தார்.

👉 2002ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளரான கு. இராமலிங்கம் மறைந்தார்.

👉 1985ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.

பிறந்த நாள் :-

பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன்


🏁 சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார்.

🏁 1920ஆம் ஆண்டு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்தார். அதனால் இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதில் கலந்து கொண்டார்.

🏁 சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடனும் நல்ல நட்பு ஏற்பட்டது.

🏁 இவர் சிறந்த பேச்சாளர். இவருடைய உணர்ச்சிமிக்க உரைகளால் மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார்.

🏁 இவரது ஊர்மிளா என்ற காவியம் பெரிதும் போற்றப்படும் இந்தி இலக்கியமாக இன்றளவும் திகழ்கிறது. 1960ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார்.

🏁 நாட்டின் சுதந்திரத்துக்கும், வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுத்து தொண்டாற்றியவருமான பாலகிருஷ்ண சர்மா நவீன் தனது 62வது வயதில் (1960) மறைந்தார். 


இன்றைய நிகழ்வுகள்


1609 – இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.


1825 – முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைசு) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்தது.[1]


1854 – இயேசுவின் தாய் மரியாள் பிறப்புநிலைப் பாவத்தில் இருந்து பாதுக்காக்கப்பட்டதை அறிவிக்கும் அமலோற்பவ அன்னை பற்றிய திருத்தந்தையின் தவறா வரம் ஒன்பதாம் பயசு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டது.


1881 – ஆத்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 380 பேர் உயிரிழந்தனர்.


1907 – ஐந்தாம் குசுத்தாவ் சுவீடன் மன்னராக முடிசூடினார்.


1914 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச கடற்படை போக்லாந்து தீவுகளில் இடம்பெற்ற போரில் செருமனியக் கடற்படையைத் தோற்கடித்தது.


1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் சாங்காய், மலாயா, தாய்லாந்து, பிலிப்பீன்சு, இடச்சு கிழக்கிந்தியா ஆகியவற்றின் மீது ஒரே நேரத்தில் தாக்குதலை ஆரம்பித்தன.


1941 – பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை சப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா சப்பான் மீது போரை அறிவித்தது.


1941 – பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு சப்பான் மற்றும் செருமனி மீது போரை அறிவித்தது.


1941 – பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.


1942 – பெரும் இன அழிப்பு: உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.


1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் படையினர் கிரேக்கத்தில் மதப்பள்ளபொன்றைத் தாக்கி அங்கிருந்த மதகுருக்கள் உட்பட 22 பேரைப் படுகொலை செய்தனர்.


1953 – 'அணு அமைதிக்கே' என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.


1963 – மேரிலாந்தில் அமெரிக்க விமானம் ஒன்று மின்னலால் தாக்கப்பட்டு வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.


1966 – எரக்கிளியோன் என்ற கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஏஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் உயிரிழந்தனர்.


1969 – கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 90 பேர் உயிரிழந்தனர்.


1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: இந்தியக் கடற்படை கராச்சி நகர் மீது தாக்குதலைத் தொடுத்தது.


1972 – சிகாகோவில் போயிங் 737 விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் உயிரிழந்தனர்.


1974 – கிரேக்கத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மன்னராட்சியை இல்லாதொழிக்க மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.


1980 – பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


1982 – சுரிநாமில் இராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.


1985 – சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.


1987 – பனிப்போர்: நடுத்தர-வீச்சு அணுவாயுதங்கள் தொடர்பான உடன்பாட்டில் அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்டு ரேகனும் சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவும் வெள்ளை மாளிகையில் கையெழுத்திட்டனர்.


1987 – பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.


1988 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் ஏ-10 தண்டபோல்ட் 2 விமானம் செருமனியில் குடிமனைப் பகுதியில் வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.


1991 – சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதெனவும், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் என்ற அமைப்பை உருவாக்குவதெனவும் உருசியா, பெலருஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.


1998 – அல்சீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.


2004 – தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம் உருவானது.


2010 – எசுபேசுஎக்சு என்ற தனியார் நிறுவனம் பால்கன் 9 விண்கலத்தை இரண்டாவது தடவையும், டிராகன் விண்கலத்தை முதலாவது முறையும் விண்வெளிக்கு ஏவியது.


2010 – சப்பானின் கார்க்கோசு விண்கலம் வெள்ளி கோளை 80,800 கிமீ தூரத்தில் கடந்தது.


2013 – லிட்டில் இந்தியா கலவரம்: சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நிகழ்ந்த விபத்தை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.


இன்றைய பிறப்புகள்


கிமு 65 – ஓராசு, உரோமைப் போர்வீரர், கவிஞர் (இ. கிமு 8)


1542 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587)


1883 – ஆத்மானந்தர், இந்தியத் துறவி, யோகி (இ. 1959)


1943 – ஜிம் மோரிசன், அமெரிக்கப் பாடகர், கவிஞர் (இ. 1971)


1944 – சசிகுமார், தமிழ்த் திரைப்பட நடிகர், இராணுவ வீரர் (இ. 1974)


1946 – சர்மிளா தாகூர், இந்தியத் திரைப்பட நடிகை


1947 – மார்கரெட் கெல்லர், அமெரிக்க வானியலாளர்


1947 – கங்கை அமரன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர்


1948 – கான்சுடன்சு டோம் நோகுசி, சீன-அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்


1950 – செ. பெருமாள், தமிழக அரசியல்வாதி (இ. 2013)


1953 – மனோபாலா, தமிழகத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்


1959 – ஜிம் யோங் கிம், கொரிய அமெரிக்க மருத்துவர்


1960 – லிம் குவான் எங், மலேசிய அரசியல்வாதி


1966 – டைலர் மானே, கனடிய நடிகர்


1968 – சிவஞானம் சிறீதரன், இலங்கை அரசியல்வாதி


1976 – நிருபமா வைத்தியநாதன், இந்திய டென்னிசு வீராங்கனை


1978 – இயன் சோமர்ஹால்டர், அமெரிக்க நடிகர்


1982 – நிக்கி மினாஜ், அமெரிக்க நடிகை


இன்றைய இறப்புகள்


1818 – யோகான் கோட்லீப் கான், சுவீடன் வேதியியலாளர் (பி. 1745)


1864 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1815)


1903 – எர்பெர்ட் இஸ்பென்சர், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1820)


1978 – கோல்டா மேயர், இசுரேலின் 4வது பிரதமர் (பி. 1898)


1980 – ஜான் லெனன், ஆங்கிலேயப் பாடகர் (பி. 1940)


1982 – தேவன் யாழ்ப்பாணம், ஈழத்து எழுத்தாளர், பேச்சாளர் (பி. 1924)


1992 – தோப்பில் பாசி, மலையாள நாடக, திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் (பி. 1924)


1995 – எஸ். அகஸ்தியர், ஈழத்து எழுத்தாளர் (பி. 1926)


2002 – கு. இராமலிங்கம், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1922)


2014 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (பி. 1927)


2014 – மாங்கோ, இத்தாலிய பாடகர், இசைக் கலைஞர் (பி. 1954)


இன்றைய சிறப்பு நாள்


மரியாவின் அமல உற்பவம் விழா


அன்னையர் நாள் (பனாமா)