சென்னை சர்­வதேச திரைப்­பட நிறைவு விழா­வில் சிறந்த நடிகருக்­கான விருதை விஜய் சேது­ப­தியும், சிறந்த நடி­கைக்­கான விருதை சாய்பல்லவியும் பெற்­ற­னர். 

Chennai International Film Festival concludes: Best Actor-Actress Award for Vijay Sethupathi, Sai Pallavi!



இந்தோ சினி அப்­ரிசி­யே­ஷன் பவுண்­டே­ஷன் (ஐசிஏஎப்) சார்­பில் 20-வது சென்னை சர்­வதேச திரைப்­பட விழா, கடந்த 15–ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் 51 நாடுகளில் இருந்து 102 படங்­கள் திரை­யிடப்­பட்­டன. நிறைவு நாள் நிகழ்ச்சி, சத்யம் திரை­ய­ரங்கில் நேற்று மாலை நடை­பெற்­றது. இந்­நிகழ்ச்சி­யில் இயக்­குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து­கொண்­டார். 

திரைப்­பட விழா போட்டியில் தமிழ் பிரிவில் ஆதார், இர­வின் நிழல், இறுதிப் பக்கம், மாமனி­தன், கார்கி, கசட­த­பற, நட்­சத்­தி­ரம் நகர்­கி­றது, கிடா, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்­டம் ஆகிய 12 படங்­கள் பங்கேற்­றன. 

 மொத்­த­மாக இரு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்­கப்­பட்டன. குறும்படங்­க­ளுக்­கான பிரிவில் சிறந்­த­தி­ரைப்­படம், சிறந்த இயக்­குநர், சிறந்த ஒலிப்­பதிவு ஆகி­ய­வற்­றுக்கான விருதுகள், ‘ஊமை விழி’ படத்துக்கு வழங்­கப்பட்டது . 

அழகி குறும்­படத்­துக்­காக சிறந்த நடிகர் விருது லோகநா­தனுக்கு வழங்­கப்­பட்­டது. திரைப்­படங்­கள் பிரிவில் முதல்­ பரிசை ‘கிடா’வும், இரண்­டா­வது பரிசை ‘கச­ட­ த­பற’ படமும் பெற்­றன. சிறந்த நடிகருக்கான விருது­ நடிகர்­கள் விஜய் சேது­பதி (மாமனி­தன்), பூ ராமு (கிடா) ஆகி­யோருக்கு பகிர்ந்­த­ளிக் கப்­பட்­டன. சிறப்பு நடு­வர் விருது ‘இர­வின் நிழல்’ படத்துக்­கும், சிறப்பு சான்­றி­தழ் விருது ‘ஆதார்’ படத்­துக்­கும் வழங்­கப்­பட்­டது. சிறந்த ஒலிப்­பதி­வாளர் அந்­தோணி பிஜே ரூபன் (நட்சத்­தி­ரம் நகர்­கி­றது), சிறந்­த­படத்­தொ­குப்­பா­ளர் சிஎஸ் பிரேம் (பிகினிங்), ஒளிப்­பதி­ வாளர் ஆர்­தர் வில்­சன் (இரவின் நிழல்), சிறந்த நடிகை சாய்பல்­லவி (கார்கி) ஆகி­யோருக்கு விருதுகள் வழங்கப்­பட்­டன. 

வாழ்­நாள் சாத­னை­யாள­ருக்­கான விருதுக்கு இயக்­கு­நர் பார­தி­ராஜா தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தா வும் , விரைவில் அவ­ருக்கு விருது வழங்கப்­பட உள்­ள­தாகவும் ஐசிஏஎப் அமைப்பு தெரிவித் துள்­ளது.