அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை நிலைய மின் பாதைகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. 

இதன் காரணமாக மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி மற்றும் வின்டர் பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், பள்ளூர், தக்கோலம், புன்னை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பள்ளூர், கம்மவார்பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்த மங்கலம், சயனபுரம், நெமிலி, தக்கோலம் சி.ஐ.எஸ்.எப்., அரிகிலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை அரக்கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.