👉 1774ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஆங்கிலேய இராணுவ வீரர் ராபர்ட் கிளைவ் மறைந்தார்.

👉 1968ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பி.ஹெச்.பி (PHP) நிரலாக்க மொழியை உருவாக்கிய ரஸ்மஸ் லெர்டெர்ஃப் (Rasmus Lerdorf) பிறந்தார்.

👉 1908ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

👉 2005ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தை (video game) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டது.


பிறந்த நாள் :-


ஜல்காரிபாய்

🌹 சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள போல்ஜா என்ற கிராமத்தில் பிறந்தார்.

🌹 இவர் சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள்வீச்சு உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஜான்சி ராணி லட்சுமிபாய் இவரது போர்த்திறன், துணிச்சல் வீரத்தைக் கண்டு ஆச்சரியமடைந்து, ஜல்காரிபாயை தன் படையில் சேர்த்துக்கொண்டார்.

🌹 ஜான்சி கோட்டையின் மீது ஆங்கில அரசு பலமுறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் படையெடுப்புகளை ஜான்சி ராணியின் வீரப்படை முறியடித்தது. அதில் இவரது பங்கு முக்கியமானது.

🌹 1857ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரின்போது, மிகப்பெரிய படையுடன் ஆங்கில அரசு ஜான்சியை முற்றுகையிட்டது. கல்பி என்ற இடத்தில், மற்ற புரட்சிப் படைகளுடன் இணைவதாகத் திட்டமிட்டிருந்த ஜான்சி ராணிக்கு, பெரிய படையை எதிர்த்துப் போரிடுவது சவாலாக இருந்தது.

🌹 ராணி வேடத்தில் தானே முன்னின்று போரிடுவதாக கூறிய ஜல்காரிபாய், தந்திரமாக ராணியை கோட்டையில் இருந்து தப்ப வைத்தார். அதே நேரத்தில் ஜான்சி படைக்குத் தலைமை வகித்து வீரத்துடன் போரிட்டார். ஆனால், மாபெரும் படையை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளிடம் பிடிபட்டார்.

🌹 ஜான்சி ராணியை பிடித்துவிட்டதாக கூறிய ஆங்கில அரசு ஜல்காரிபாயிடம் 'உங்களை என்ன செய்வது?' என்று கேட்டனர். அதற்கு 'தூக்கிலிடுங்கள்' என்றார். பின்னர், அவர் ராணி அல்ல என்ற உண்மையை அறிந்த ஆங்கில அரசு, அவரது வீரத்தையும், விவேகத்தையும் பாராட்டி விடுதலை செய்தது.

🌹 ஜல்காரிபாய் 1858ஆம் ஆண்டு ஜான்சி போரின்போது வீரமரணம் அடைந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன.


இன்றைய நிகழ்வுகள்


498 – திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

1307 – ஐரோப்பாவில் உள்ள அனைத்து புனித வீரர்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு ஆணையிட்டார்.

1635 – சீனக் குடியரசின் இடச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.

1718 – அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான்.

1873 – பிரெஞ்சு நீராவிக் கப்பல் இசுக்காட்டியக் கப்பலுடன் அத்திலாந்திக் பெருங்கடலில் மோதி மூழ்கியதில் 226 உயிரிழந்தனர்.

1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

1922 – துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.

1935 – பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தன.

1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியத் தளபதி பிரீட்றிக் பவுலஸ், ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக இட்லருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சங் கை செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.

1943 – லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1956 – 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் ஆரம்பமாயின.

1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சசு ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார். துணைத் தலைவர் லின்டன் பி. ஜான்சன் 36வது அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

1974 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.

1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து எசுப்பானியாவின் அரசராக யுவான் கார்லொசு எசுப்பானியாவின் அரசரானார்.

1977 – மீயொலிவேக கான்கோர்டு சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலண்டன் முதல் நியூயார்க் வரை ஆரம்பித்தது.

1986 – மைக் டைசன் தனது 20வது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1989 – மேற்கு பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.

1995 – உலகின் முதலாவது முழுமையான அசைவூட்டத் திரைப்படம் டாய் ஸ்டோரி வெளியானது.

1995 – சினாய் தீபகற்பம், சவூதி அரேபியா பகுதிகளில் 7.3 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில், 8 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.

2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

2003 – ஜோர்ஜியாவில் அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அரசுத்தலைவரைப் பதவி விலகுமாறு கோரினர்.

2005 – செருமனியின் முதலாவது பெண் அரசுத்தலைவராக அங்கிலா மெர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.

2007 – இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.

2012 – எட்டு நாட்கள் போருக்குப் பின்னர் காசாக்கரையில் அமாசிற்கும் இசுரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

இன்றைய பிறப்புகள்


1830 – ஜல்காரிபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1858)

1839 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தமிழிசை அறிஞர் (இ. 1898)

1890 – சார்லஸ் டி கோல், பிரான்சின் 18வது அரசுத்தலைவர் (இ. 1970)

1898 – லயனல் ராபின்ஸ், பிரித்தானியப் பொருளியல் அறிஞர் (இ. 1984)

1904 – மரே ராஜம், தமிழகத் தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் (இ. 1986)

1904 – இலூயீ நீல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 2000)

1939 – முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி

1943 – பில்லி ஜீன் கிங், அமெரிக்க டென்னிசு வீராங்கனை

1958 – ஜேமி லீ குர்திஸ், அமெரிக்க நடிகை

1967 – பொறிஸ் பெக்கர், செருமானிய-சுவிசு டென்னிசு வீரர்

1967 – மார்க் ருஃப்பால்லோ, அமெரிக்க நடிகர்

1968 – ரஸ்மஸ் லெர்டெர்ஃப், பி.எச்.பி நிரல் மொழியைக் கண்டுபிடித்தவர்

1969 – மர்ஜானே சத்ரபி, ஈரானிய எழுத்தாளர்

1970 – மாவன் அத்தப்பத்து, இலங்கைத் துடுப்பாளர்

1984 – ஸ்கார்லெட் ஜோஹான்சன், அமெரிக்க நடிகை

1986 – ஆஸ்கர் பிஸ்டோரியஸ், தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர்

இன்றைய இறப்புகள்


1718 – பிளாக்பியர்ட், ஆங்கிலேயக் கடல் கொள்ளைக்காரன் (பி. 1680)

1774 – ராபர்ட் கிளைவ், ஆங்கிலேய இராணுவ வீரர், அரசியல்வாதி (பி. 1725)

1907 – ஆசப் ஆல், அமெரிக்க வானியலாளர் (பி. 1829)

1944 – ஆர்த்தர் எடிங்டன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1882)

1963 – ஆல்டசு அக்சுலி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1894)

1963 – ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவின் 35வது அரசுத்தலைவர் (பி. 1917)

1967 – சிதம்பரநாதன் செட்டியார், தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907)

1967 – தாரா சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1885)

1974 – ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1908)

1988 – ரேமாண்ட் டார்ட், ஆத்திரேலியத் தொல்லியலாளர். புதைபடிவ ஆய்வாளர் (பி. 1893)

1997 – தி. சதாசிவம், தமிழகப் பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1902)

2011 – சுவெத்லானா அலிலுயேவா, உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)

2011 – லின் மர்குலிஸ், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1938)

2012 – பி. கோவிந்த பிள்ளை, இந்திய அரசியல்வாதி (பி. 1926)

2015 – சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி (பி. 1949)

2016 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர், இசைக்கலைஞர் (பி. 1930)

2016 – எம். ஜி. கே. மேனன், இந்திய இயல்பியலாளர் (பி. 1928)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (லெபனான், பிரான்சிடம் இருந்து 1943)

ஆசிரியர் நாள் (கோஸ்ட்டா ரிக்கா)