👉 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் மறைந்தார்.

👉 2000ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உத்தராஞ்சல், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது.


முக்கிய தினம் :-


உலக அறிவியல் தினம்

🌷 சர்வதேச கின்னஸ் உலக சாதனை தினம் நவம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டு முதன்முதலாக கின்னஸ் புத்தகம் வெளியிடப்பட்டது.

🌷 முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ல் கொண்டாடப்பட்டது. இத்தினத்தின்போது கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடப்படுகிறது.


தேசிய சட்ட சேவைகள் தினம்

🌸 சட்ட சேவைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி மாநில அதிகாரிகள் மூலம் கொண்டாடப்படுகிறது.

🌸 சட்டக் கல்வி சார்ந்த முகாம்கள் நாட்டின் முக்கியமான தலைநகரங்களில் நடத்தப்படுகின்றன. ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்கள், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், இயற்கை சீற்றத்தால் பாதித்தவர்கள் ஆகியோருக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க உச்சநீதிமன்றம் 1995ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அன்று இலவச சட்ட சேவையை துவக்கியது.

🌸 இளம் வயதில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அரசியலமைப்பு உரிமைகளையும், அதன் தொடர்பான சட்டங்களையும் தெரிந்துகொள்ள இத்தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


பிறந்த நாள் :-


முகமது இக்பால்

🌷 கவிஞரும், மெய்யியல் அறிஞருமான சர் முகமது இக்பால் 1877ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பாகிஸ்தானிலுள்ள சியால்கோட்டில் பிறந்தார்.

🌷 இவர் சட்டம் பயிலும்போதே பல கவிதைகளைப் படைத்தார். இலக்கியத் திறன்தான் இவரை உலகப்புகழ் பெற வைத்தது. இவர் எழுதிய 'சாரே ஜஹான் ஸே அச்சா' பாடல் 1947-ல் இந்திய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக ஒலித்தது.

🌷 நவீனகால இஸ்லாமிய சிந்தனையாளர் எனப் போற்றப்பட்டார். இவரது முதல் கவிதை நூல் 1915-ல் வெளிவந்தது. கவிதைகள் தவிர சமூகம், கலாச்சாரம், மதம், அரசியல் தொடர்பாக உருது மற்றும் ஆங்கிலத்தில் இவர் ஆற்றிய உரைகள் பிரபலமானவை. உருது பேசும் மக்களால் 'கிழக்கின் கவிஞர்' என்று குறிப்பிடப்பட்டார்.

🌷 பாகிஸ்தான் அரசு இவரை தேசியக் கவிஞராக அங்கீகரித்து, இவரது பிறந்த தினத்தை 'இக்பால் டே' என்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற 'சாரே ஜஹான் ஸே அச்சா' பாடலை இயற்றிய மகத்தான படைப்பாளியான முகமது இக்பால் 60வது வயதில் (1938) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


1277 – அபெர்கொன்வி உடன்பாடு உவெல்சியப் போர்களின் முதலாவது கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

1520 – ஸ்டாக்ஹோம் நகரில் இரண்டாம் கிறித்தியான் மன்னருக்கு எதிராக செயற்பட்ட 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1688 – மாண்புமிகு புரட்சி: ஆரஞ்சின் வில்லியம் எக்செட்டர் நகரைக் கைப்பற்றினான்.

1720 – எருசலேமில் யூதர்களின் தொழுகைக் கூடம் ஒன்று முசுலிம்களால் தீயிட்டு அழிக்கப்பட்டது. அசுகனாசிம்கள் எருசலேமில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

1793 – கிறித்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.

1799 – பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.

1867 – சப்பானின் கடைசி இராணுவ ஆட்சியாளர் ஆட்சியை சப்பானியப் பேரரசரிடம் ஒப்படைத்தனர். மெய்சி மீள்விப்பு ஆரம்பமானது.

1872 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் உயிரிழந்தனர்.

1887 – ஐக்கிய அமெரிக்கா அவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.

1888 – கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.

1906 – அதிகாரபூர்வமாக வெளிநாட்டுக்குச் சென்ற முதலாவது அமெரிக்க அரசுத்தலைவராக தியொடோர் ரோசவெல்ட் பனாமா கால்வாயை பார்க்கச் சென்றார்.

1907 – கலினன் வைரம் இங்கிலாந்தின் ஏழாம் எட்வர்டு மன்னருக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு பரிசளிக்கப்பட்டது.

1913 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.

1914 – செருமனியின் எம்டன் கப்பல் கொக்கோசு தீவுகளில் இடம்பெற்ற போரில் ஆத்திரேலியாவின் சிட்னி கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

1918 – செருமனியப் புரட்சியை அடுத்து இரண்டாம் வில்லியம் முடி துறந்தார். செருமனி குடியரசானது.

1921 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1923 – செருமனி, மியூனிக்கில், நாட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை காவல்துறையினர் முறியடித்தனர்.

1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீன இராணுவம் சாங்காய் நகரில் இருந்து வெளியேறின.

1938 – நாட்சி செருமனியின் இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

1953 – கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1963 – சப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் உயிரிழந்தனர்.

1965 – கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைச் சேர்ந்த ராஜர் அல்லன் என்பவர் வியட்நாம் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் அவைக்கு முன்னால் தீக்குளித்து மாண்டார்.

1967 – அப்பல்லோ திட்டம்: நாசா அப்பல்லோ 4 ஆளில்லா விண்கலத்தை ஏவியது.

1985 – சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி காஸ்பரொவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த (22) சதுரங்க வாகையாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

1989 – பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு செருமனி பெர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜெர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.

1990 – நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

1994 – டார்ம்சிட்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

2000 – உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

2005 – வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்கஸ்தான், பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

2005 – யோர்தான், அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

2012 – வடக்கு மியான்மரில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.

2012 – கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் காவலர்கள், மற்றும் கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய பிறப்புகள்


1877 – முகமது இக்பால், பாக்கிஸ்தானிய மெய்யியலாளர், கவிஞர், அரசியல்வாதி (இ. 1938)

1896 – திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1973)

1897 – ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1978)

1912 – சத்யன், மலையாளத் திரைப்பட நடிகர் (இ. 1971)

1914 – எடி இலமார், ஆஸ்திரிய-அமெரிக்க நடிகை, கண்டுபிடிப்பாளர் (இ. 2000)

1934 – கார்ல் சேகன், அமெரிக்க வானியலாளர், எழுத்தாளர் (இ. 1996)

1937 – அப்துல் ரகுமான், தமிழகக் கவிஞர், தமிழ்ப் பேராசிரியர் (இ. 2017)

1952 – ஜாக் சோஸ்டாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்

1952 – கே. என். நேரு, இந்திய அரசியல்வாதி

1959 – ஈ. காயத்ரி, தென்னிந்திய வீணைக் கலைஞர்

1965 – வேணு அரவிந்த், தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நாடக நடிகர்

1972 – எரிக் டான், அமெரிக்க நடிகர்

இன்றைய இறப்புகள்


1576 – நான்காம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1507)

1918 – கியோம் அப்போலினேர், இத்தாலிய-பிரான்சியக் கவிஞர் (பி. 1880)

1940 – நெவில் சேம்பர்லேன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1869)

1953 – அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அரேபிய மன்னர் (பி. 1880)

1962 – தோண்டோ கேசவ் கார்வே, இந்திய செயற்பாட்டாளர் (பி. 1858)

1969 – பி. வி. செரியன், இந்திய அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1893)

1970 – சார்லஸ் டி கோல், பிரான்சின் 18வது அரசுத்தலைவர் (பி. 1890)

1988 – தேங்காய் சீனிவாசன், தமிழக நாடக, திரைப்பட நடிகர், (பி.1937)

1992 – தா. சிவசிதம்பரம், இலங்கை அரசியல்வாதி (பி. 1926)

1994 – ஒசி அபேகுணசேகரா, இலங்கை அரசியல்வாதி (பி. 1950)

1998 – பி. எஸ். வீரப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1911)

2002 – எஸ். எஸ். மணி நாடார், இந்திய அரசியல்வாதி (பி. 1936)

2004 – ஸ்டீக் லார்சன், சுவீடன் ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1954)

2005 – கே. ஆர். நாராயணன், இந்திய அரசியல்வாதி மற்றும் பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1920)

2006 – வல்லிக்கண்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1920)

2011 – ஹர் கோவிந்த் கொரானா, இந்திய-அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர் (பி. 1922)

2015 – சிற்பி, ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1933)

இன்றைய சிறப்பு நாள்


இறந்தோர் நாள் (பொலிவியா)

விடுதலை நாள் (கம்போடியா, பிரான்சிடம் இருந்து 1953)

தேசிய சட்ட சேவைகள் நாள் (இந்தியா)