👉 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவர் எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார்.


👉 1923ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஒருங்கிணை சுற்றுகள் (இன்டகிரேடட் சர்க்யூட் ஐ.சி.) உருவாக்க முன்னோடியாக இருந்த ஜாக் செயின்ட் கிளேர் கில்பி அமெரிக்காவின் மிஸோரி மாநிலம் ஜெபர்சன் நகரில் பிறந்தார்.

👉 2009ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியவர்களில் ஒருவரான வித்தாலி கீன்ஸ்புர்க் மறைந்தார்.


முக்கிய தினம் :-


உலக நகர திட்டமிடல் தினம்


🌷 உலக நகர திட்டமிடல் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நகரத்தை உருவாக்கும்போது, எதிர்காலத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. இத்தினத்திற்கான அமைப்பு 1949ஆம் ஆண்டு பேராசிரியர் Carlos Maria della Paolera என்பவரால் நிறுவப்பட்டது.


சர்வதேச கதிரியக்கவியல் தினம்

🌸 இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8ஆம் தேதி சர்வதேச கதிரியக்கவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

🌸 மேலும் வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவர் 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார். எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்த தினத்தின் நினைவாக 2012ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


பிறந்த நாள் :-


வீரமாமுனிவர்


🌹 மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் 1680ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார்.

🌹 இவர் இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றை படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் மற்றும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.

🌹 தொன்னூல் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழ் மொழியில் முதன்முதலாகப் பேச்சுத்தமிழை விவரித்தார்.

🌹 இவர் இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றியுள்ளார். இவர் தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்த வீரமாமுனிவர் 1747ஆம் ஆண்டு தன்னுடைய 66வது வயதில் மறைந்தார்.


துவாரம் வெங்கடசாமி நாயுடு

🌺 பிரபல வயலின் கலைஞர் துவாரம் வெங்கடசாமி நாயுடு 1893ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவருக்கு வயலின் வாசிப்பதில் இருந்த ஆர்வத்தை அறிந்த இவரின் அண்ணன், தானே முதல் குருவாகி தம்பிக்கு கற்றுக்கொடுத்தார்.

🌺 இவரது இசை ஞானத்தை வளர்க்க வீணை சேஷண்ணா, சங்கமேஸ்வர சாஸ்திரி, கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் உள்ளிட்ட பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார். அவற்றை கேட்டும், பயிற்சி செய்தும் தன் இசை ஞானத்தை பட்டை தீட்டிக்கொண்டார் வெங்கடசாமி.

🌺 சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திர பல்கலைக்கழகம் 'கலா ப்ரபூர்ண' என்ற கௌரவ முனைவர் பட்டம் வழங்கி இவரை சிறப்பித்தது. இப்பட்டம் பெற்ற முதல் இசைக் கலைஞர் இவரே. இவர் தன்னுடைய 71வது வயதில் (1964) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


1519 – எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார்.

1520 – டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1576 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர்.

1605 – இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார்.

1620 – பிராகா நகரில் இடம்பெற்ற சமரில் கத்தோலிக்க திருச்சபையின் படைகள் வெற்றி பெற்றன.

1644 – சீனாவில் மிங் மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சிங் ஆட்சி தொடங்கியது.

1811 – இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், யாழ்ப்பாணத்தில் கீழ் நீதிமன்றமும் அமைக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகளுக்கு சான்றாயர் விசாரணை முறையும் அமுலுக்கு வந்தது.[1]

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பிரித்தானியாவின் டிரெண்ட் என்ற அஞ்சல் கப்பலை வழிமறித்த அமெரிக்காவின் 'சான் யெசிண்டோ கப்பல் இரண்டு கூட்டமைப்பு தூதர்களைக் கைது செய்தது.

1889 – மொன்ட்டானா அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.

1892 – கறுப்பின, மற்றும் வெள்ளையின அமெரிக்கத் தொழிற்சங்கங்கள் முதல் தடவையாக ஒன்றிணைந்து நியூ ஓர்லென்சு மாநிலத்தில் வெற்றிகரமான 4-நாள் வேலை நிறுத்தத்தை நடத்தினர்.

1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்லெம் ரோண்ட்கன் எக்சு-கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1901 – ஏதென்சு நகரில் கத்தோலிக்க நற்செய்திகளின் கிரேக்க மொழிபெயர்ப்பு சர்ச்சையை அடுத்து கலவரம் ஏற்பட்டதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

1917 – உருசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோரை உள்ளடக்கிய மக்கள் பேரவை அமைக்கப்பட்டது.

1923 – மியூனிக் நகரில் இட்லர் தலைமையில் நாட்சிகள் செருமனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

1936 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பிராங்கோயிசப் படைகள் மத்ரித் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது, ஆனாலும் 3-ஆண்டு மத்ரித் முற்றுகை ஆரம்பமானது.

1939 – மியூனிக் நகரில் இட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1940 – கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலி கிரேக்கத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: அல்ஜியர்சில் பிரெஞ்சு எதிர்ப்புப் புரட்சி இடம்பெற்றது.

1950 – கொரியப் போர்: அமெரிக்க வான்படை வட கொரிய மிக்-15 விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியது.

1957 – அமெரிக்காவின் பான்-ஆம் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவுக்கும் ஒனலூலுவிற்கும் இடையில் 44 பேருடன் காணாமல் போனது. ஒரு கிழமையின் பின்னர் இதன் பாகங்களும் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

1957 – ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது ஐதரசன் குண்டை பசிபிக் பிராந்தியத்தில் கிரிபட்டி தீவுகளில் வெற்றிகரமாகச் சோதித்தது.

1965 – சாகோஸ் தீவுக்கூட்டம், அல்டாப்ரா, பார்க்கார், டெ ரோச்சசு ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1965 – பிரித்தானியாவில் மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1977 – வெர்ஜினாவில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

1987 – வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

2002 – சதாம் உசேன் உடனடியாக ஆயுதக்களைவில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை எச்சரிக்கை விடுத்தது.

2006 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் 19 பாலத்தீனர்களை அவர்களது வீடுகளில் வைத்து சுட்டுக் கொன்றனர்.[2]

2006 – வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 – பாக்கித்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2011 – 2005 யூ55 என்ற சிறுகோள் பூமியை 324,600 கிமீ தூரத்தில் அணுகியது.

2013 – சூறாவளி ஹையான், பிலிப்பீன்சில் விசயன் தீவுகள் பகுதியைத் தாக்கியதில், 6,340 பேர் உயிரிழந்தனர்.

2016 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்தார்.

இன்றைய பிறப்புகள்


1656 – எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1742)

1680 – வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1742)

1831 – லிட்டன் பிரபு, இந்தியாவின் 30வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1880)

1875 – சியூ சின், சீனப் புரட்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் (இ. 1907)

1893 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு, ஆந்திர வயலின் இசைக் கலைஞர் (இ: 1964)

1902 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)

1903 – அல்பிரட் தம்பிஐயா, இலங்கைத் தொழிலதிபர், அரசியல்வாதி

1910 – நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, தமிழக தவில் கலைஞர் (இ. 1964)

1912 – டி. எஸ். சந்தானம், தமிழகத் தொழிலதிபர் (இ. 2005)

1908 – ராஜா ராவ், இந்திய எழுத்தாளர் (இ. 2006)

1920 – சிதாராதேவி, இந்திய நடிகை, நடன இயக்குநர் (இ. 2014)

1923 – ஜாக் கில்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)

1926 – டார்லீன் சி. ஆப்மேன், அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர்

1927 – லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி

1937 – ராண்டார் கை, இந்தியத் தமிழ் திரைப்பட, சட்ட எழுத்தாளர்

1943 – ரிச்சர்ட் பென்சன், அமெரிக்க நிழற்படக்காரர், அச்சுத் தொழிலாளி, கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2017)

1954 – கசுவோ இசுகுரோ, சப்பானிய-பிரித்தானிய புதின எழுத்தாளர்

1957 – சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழ்ப் போராளி, அரசியல்வாதி

1966 – சீமான், தமிழக அரசியல்வாதி, திரைப்பட இயக்குனர், நடிகர்

1969 – உபேந்திரா லிமாயி, இந்தியத் திரைப்பட நடிகர்

1976 – பிறெட் லீ, ஆத்திரேலியத் துடுப்பாளர்

1981 – நியல் ஓ'பிறையன், அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர்

1986 – ஏரன் சுவோற்சு, அமெரிக்க கணினியியலாளர் (இ. 2013)

இன்றைய இறப்புகள்


397 – மார்ட்டின், பிரான்சிய ஆயர், புனிதர்

955 – இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)

1240 – இப்னு அரபி, அராபிய சூபி இறைஞானி, மெய்யியலாளர் (பி. 1165)

1605 – இராபர்ட்டு கேட்சுபி, ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத் தலைவர் (பி. 1573)

1674 – ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1608)

1958 – சி. கணேசையர், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1878)

1969 – வெசுட்டோ மெல்வின் சுலிப்பர், அமெரிக்க வானியலாளர் (பி. 1875)

1970 – நெப்போலியன் ஹில், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1883)

1987 – சக்தி கிருஷ்ணசாமி, தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர் திரைக்கதை ஆசிரியர் (பி. 1913)

2000 – சோ. சிவபாதசுந்தரம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1912)

2006 – கா. காளிமுத்து, தமிழக அரசியல்வாதி (பி. 1942)

2009 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1916)

2013 – சிட்டிபாபு, இந்திய நடிகர் (பி. 1964)

2014 – வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)

2014 – ஐ. எஸ். முருகேசன், தமிழக மோர்சிங் இசைக் கலைஞர் (பி. 1930)

2015 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த துறவி, அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1942)

இன்றைய சிறப்பு நாள்


உலக நகர்ப்புறவியம் நாள்

பன்னாட்டுக் கதிரியல் நாள்