விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு செய்ய அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 
கால்நடை வளர்ப்போருக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு, தேசிய கால்நடைகள் இயக்கம் 2022-2023-ன்படி கால்நடைகளை காப்பீடு செய்ய மாவட்டத்திற்கு 8.50 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மற்றும் ஆதிதி ராவிடர், பழங்குடியினருக்கு (பிபிஎல்) 70% மானியத்திலும், வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு (ஏபிஎல்) 50 சதவீதம் மானியத்திலும் கால்நடைகளுக்குக்காப்பீடு செய்யப்படும்.

பசுக்கள், எருமைகள் 2 வயது முதல் 8 வயது வரையிலும், ஆடுகள் 1 முதல் 3 வயது வரையிலும், பன்றிகள் 1 முதல் 5 வயது வரையிலும் காப்பீடு செய்யப்படும். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 அலகுகள் வரை காப்பீடு செய்யப்படும்.

இத்திட்டம் மூலம் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகள் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.