ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மணந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்,

இவரது மனைவி சத்யபிரியா. இருவரும் நவல்பூர் பகுதியில் வசிக்கும் சத்யபிரியாவின் தாய் வீட்டுக்கு காரில் சென்றனர்

வாலாஜா அருகே வி.சி.மோட்டூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.