வாலாஜாபேட்டை எஸ்ஐ தீபன் சக்கரவர்த்தி தலைமையில் போலீசார் நேற்று தென்றல் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே தில்லை நகர் பகுதியில் சேர்ந்த தனுஷ்கோடி (20) என்பவரிடம் சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.

சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

அவரை கைதுசெய்து 150கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.