👉 1857ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணியான ஷெஃபீல்ட் கால்பந்து அணி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.


👉 1931ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.


முக்கிய தினம் :-


ஐக்கிய நாடுகள் தினம் 


🌷 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இத்தினமானது 1948ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

🌷 இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவதாகும். மேலும், ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.


உலக தகவல் வளர்ச்சி தினம் 


🌸 வளர்ச்சியின் மீதான பிரச்சனைகளின் மீது உலகின் கவனத்தை ஈர்க்கவும், அதை சரி செய்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அவசியத்தை உலகில் பரப்பவும் உலக தகவல் வளர்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ம் தேதி, அனுசரிக்கப்படுகிறது.

🌸எனவே, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியை ஐ.நா.சபை உலக தகவல் வளர்ச்சி தினமாக அறிவித்தது. இத்தினம் 1973ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.


உலக போலியோ தினம் 


🌹 உலக போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாத நோய்க்கு முதன்முறையாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் டாக்டர் ஜோனஸ் சால்க் ஆவார். இளம்பிள்ளை வாத நோயானது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது.

🌹 இத்தினத்தின் முக்கிய நோக்கம், போலியோவை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதை ஒழிக்க உலகளவில் முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.


நினைவு நாள் :-


👉 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.


பிறந்த நாள் :-


இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லக்ஷ்மணன் 

🌺 நகைச்சுவை சித்திரம் வரைபவரான இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லக்ஷ்மணன் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

🌺 கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 'யூ செட் இட்' (You Said it) என்கிற தலைப்பில் 'திருவாளர் பொதுஜனம்' (Common Man) என்கிற கதாபாத்திரத்தை 1951 முதல் அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.

🌺 இவர் பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் தன்னுடைய 93வது வயதில் (2015) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர்.

1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.

1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.

1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

1851 – யுரேனசு கோளைச் சுற்றும் உம்பிரியல், ஏரியல் ஆகிய நிலாக்களை வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.

1857 – உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணி செபீல்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1861 – ஐக்கிய அமெரிக்காவில் கண்டங்களுக்கிடையேயான முதலாவது தந்தித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

1871 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 20 வரையான சீனக் குடியேறிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

1902 – குவாத்தமாலாவின் சாண்டா மரியா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. இது 20-ஆம் நூற்றாண்டின் மூன்றாவது மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும்.

1911 – வட கரொலைனாவில் ரைட் சகோதரர்கள் தமது வானூர்தியில் வானில் 9 நிமிடங்கள் 45 செக்கன்கள் பறந்தார்கள்.

1912 – முதலாவது பால்கான் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற உதுமானியப் பேரரசுக்கு எதிரான போரில் செர்பியா வெற்றி பெற்றது.

1917 – முதலாம் உலகப் போர்: கப்பரெட்டோ சமரில் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளிடம் இத்தாலி பெரும் தோல்வியடைந்தது.

1917 – போல்செவிக் செம்படையினர் உருசியாவில் அரசக் கட்டடங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தனர். அக்டோபர் புரட்சியின் முதல் நிகழ்வுகள் இவையாகும்.

1929 – கறுப்பு வியாழன்: நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகள் சரிவு.

1930 – பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் வாசிங்டன் லூயிசு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1943 – நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: முசாசி என்ற சப்பானியப் போர்க்கப்பலை அமெரிக்க விமானங்கள் தாக்கி மூழ்கடித்தன.

1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1946 – வி-2 இல. 13 என்ற ஏவூர்தியில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி மூலம் முதன் முதலாக விண்ணில் இருந்து பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டது.

1949 – ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

1954 – டுவைட் டி. ஐசனாவர் தெற்கு வியட்நாமிற்கு ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்தார்.

1960 – சோவியத் ஒன்றியத்தின் பைக்கனூர் விண்தளத்தில் ஆர்-16 ஏவுகணை வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1964 – வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.

1980 – போலந்து அரசு சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது.

1994 – கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் காமினி திசாநாயக்கா உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.

1998 – டீப் ஸ்பேஸ் 1 என்ற வால்வெள்ளி/சிறுகோள் திட்டம் ஆரம்பமானது.

2003 – கான்கோர்டு விமானம் தனது கடைசி வணிக-நோக்குப் பயணத்தை மேற்கொண்டது.

2007 – சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

2008 – இரத்த வெள்ளி அன்று உலகின் பெரும்பாலான பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டன.

இன்றைய பிறப்புகள்


1632 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (இ. 1723)

1775 – பகதூர் சா சஃபார், இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் (இ. 1862)

1804 – வில்கெம் எடுவர்டு வெபர், செருமானிய இயற்பியலாளர் (இ. 1891)

1827 – ரிப்பன் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி, இந்திய வைசிராய் (இ. 1909)

1890 – சிசிர் குமார் மித்ரா, இந்திய இயற்பியலாளர் (இ. 1963)

1914 – இலட்சுமி சாகல், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இந்தியத் தேசிய இராணுவப் போராளி (இ. 2012)

1915 – பாப் கார்னே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1998)

1921 – ஆர். கே. லட்சுமண், இந்திய ஓவியர் (இ. 2015)

1921 – ஏ. கே. வேலன், தமிழக எழுத்தாளர்

1924 – சி. கதிரவேலுப்பிள்ளை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1981)

1932 – இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (இ. 2012)

1940 – கி. கஸ்தூரிரங்கன், இந்திய விண்வெளி அறிவியலாளர்

1954 – மால்கம் டேர்ன்புல், ஆத்திரேலியாவின் 29வது பிரதமர்

1957 – இ. ஜெயராஜ், இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்

1971 – மல்லிகா செராவத், இந்திய நடிகை

1980 – லைலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1983 – தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்

1992 – துளசி தருமலிங்கம், இலங்கை-செருமனிய குத்துச்சண்டை வீரர்

இன்றைய இறப்புகள்


1601 – டைக்கோ பிராகி, டென்மார்க் வானியலாளர் (பி. 1546)

1801 – மருது பாண்டியர், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்

1869 – ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1786)

1870 – அந்தோனி மரிய கிளாரட், எசுப்பானிய, கத்தோலிக்க மறைபோதகர் (பி. 1807)

1953 – மு. கதிரேசச் செட்டியார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1881)

1956 – எச். என். ரிட்லி, பிரித்தானியத் தாவரவியலாளர், மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர் (பி. 1885)

1981 – எடித் எட், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (பி. 1897)

1991 – இசுமத் சுகதாய், இந்திய எழுத்தாளர் (பி. 1915)

1994 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)

2005 – றோசா பாக்ஸ், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1913)

2006 – தரம்பால், இந்திய காந்தியவாதி, வரலாற்று ஆய்வாளர் (பி. 1922)

2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்கக் கணினி அறிவியலாளர், உணரறிவியலாளர் (பி. 1927)

2013 – மன்னா தே, இந்தியப் பாடகர் (பி. 1919)

2014 – தேனுகா, கலை, இலக்கிய விமரிசகர்

2014 – எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1928)

இன்றைய சிறப்பு நாள்


அந்தோனி மரிய கிளாரட் திருவிழா

உலக இளம்பிள்ளை வாத நாள்

விடுதலை நாள் (சாம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1964)

ஐக்கிய நாடுகள் நாள்