🌸 1867ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஓவே (Elias Howe) மறைந்தார்.

🌸 1932ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி ஈராக் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.



முக்கிய தினம் :-



சர்வதேச போராட்ட தினம்

🌸போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாத்திடவும், அனைவரும் சமூகப் பாதுகாப்பு, சம உரிமைகள் பெற்றிடவும் தொழிலாளர்கள் போராட வேண்டியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு உலகத் தொழிற்சங்க சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3ஆம் தேதியை சர்வதேச போராட்ட தினமாக அனுசரிக்குமாறு உழைப்பாளிகளுக்கு அறிவித்தது. கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


நினைவு நாள் :-


ம.பொ.சிவஞானம்

👉 விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் பிறந்தார். 

👉 வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை சூட்டினார்.

👉 இவர் செங்கோல் என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். மேலும், இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.

👉 உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய ம.பொ.சி., 89வது வயதில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஜான் கோரி 

🌟 குளிர்பதனத் தொழில்நுட்பத்தின் (ஏர் கண்டிஷன்) தந்தை என்று போற்றப்படும் ஜான் கோரி 1803ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் பிறந்தார்.

🌟 இவர் சமுதாய சேவைகள், வர்த்தகங்களில் நாட்டம் செலுத்தினார். வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். மேலும், இவர் சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார். சமரச மைய நீதிபதியாக 1841-ல் நியமிக்கப்பட்டார்.

🌟 மலேரியா, அறைகளைக் குளிரூட்டும் முறைகள், பனிக்கட்டி உற்பத்தி தொடர்பாக பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இவரது கட்டுரைகள் பிரபல அறிவியல் இதழ்களில் வெளிவந்தன.

🌟 பல ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு, பனிக்கட்டிகளை உருவாக்கி அறையைக் குளிரூட்டக்கூடிய நீராவியில் இயங்கும் கருவியைக் கண்டறிந்தார்.

🌟 தற்போதைய அனைத்து விதமான ஏர் கண்டிஷன் கருவிகளின் பெரும்பாலான நுட்பங்கள், முதன்முதலாக இவர் கண்டறிந்த குளிரூட்டும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவையே. குளிர்பதன இயந்திரம், பனிக்கட்டி தயாரிக்கும் வழிமுறை, ஏர் கண்டிஷன் கருவிகளை முதன்முதலில் உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

🌟 கடைசி வரை மனிதநேயத்துடன் விளங்கிய ஜான் கோரி, உடல்நலம் பாதிக்கப்பட்டு 52வது வயதில் (1855) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.

கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.

382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார்.

1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார்.

1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

1789 – சியார்ச் வாசிங்டன் அந்த ஆண்டின் நன்றியறிதல் நாளை அறிவித்தார்.

1833 – இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.[1]

1863 – நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையை நன்றியறிதல் நாளாக அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அறிவித்தார்.

1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.

1912 – அமெரிக்கப் படைகள் நிக்கராகுவாவின் கிளர்ச்சியாளர்களை வென்றன.

1918 – மூன்றாம் போரிசு பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.

1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.

1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1935 – இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது. இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் ஆரம்பமானது.

1942 – செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.

1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.

1963 – ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.

1978 – பின்லாந்தில் வான்படை வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதைல் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.

1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.

1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

1986 – டாஸ்க் என்ற மீக்கடத்து சுழற்சியலைவி கனடாவில் சாக் ரிவர் ஆய்வுகூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1989 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1990 – செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.

1993 – சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.

2001 – வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.

2007 – மன்னார் மாவட்டம், விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை இராணுவத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

2010 – 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி நகரில் ஆரம்பமாயின.

2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.

2015 – ஆப்கானித்தானில் குண்டூசு மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய பிறப்புகள்


1846 – பிளத்தோன் போரெத்சுகி, உருசிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)

1849 – திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (இ. 1818)

1854 – எர்மேன் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1920)

1917 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)

1919 – ஜேம்ஸ் எம். புக்கானன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2013)

1930 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)

1932 – வி. பி. இராமன், தமிழக அரசியல்வாதி (இ. 1991)

1940 – முரு. சொ. நாச்சியப்பன், மலேசிய எழுத்தாளர்

1943 – குருசரண் தாஸ், இந்திய எழுத்தாளர்

1945 – சேடபட்டி இரா. முத்தையா, தமிழக அரசியல்வாதி

1954 – சத்யராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்

1957 – இராபர்ட்டோ செவெதோ, உலக வணிக அமைப்பின் 6வது தலைவர்

1985 – அரோள் கரோலி, இந்திய இசையமைப்பாளர்

1988 – அலிசியா விகண்டேர், சுவீடிய நடிகை

இன்றைய இறப்புகள்


1226 – அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181)

1867 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1819)

1896 – வில்லியம் மோரிஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1834)

1923 – கடம்பினி கங்கூலி, இந்திய மருத்துவர் (பி. 1861)

1932 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (பி. 1863)

1954 – வேரா பெதரோவ்னா கசே, உருசிய வானியலாளர் (பி. 1899)

1962 – கந்தையா கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1892)

1966 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடிய இயற்பியலாளர் (பி. 1896)

1995 – ம. பொ. சிவஞானம், தமிழக எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1906)

1999 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (பி. 1935)

1999 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1921)

2009 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர் (பி. 1942)

2011 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1928)

2015 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)

இன்றைய சிறப்பு நாள்


மீளிணைவு நாள் (செருமனி)

விடுதலை நாள் (ஈராக், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)

தேசிய உருவாக்க நாள் (தென் கொரியா)