ராணிப்பேட்டை வாலாஜா, சோளிங்கர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Power outage tomorrow in Ranipet, Walaja, Solingar areas

ராணிப்பேட்டை


ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த முகுந்தராயபுரம், சிப்காட், ராணிப்பேட்டை நகரம், வாலாஜா, ஒழுகூர் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கி ழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், முத்துக்கடை, ஆட்டோநகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம்,லாலாபேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர். கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம் பேஸ்-3 ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வாலாஜா


அதே போன்று சிப்காட், அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், கிருஷ்ணாவரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், பெரியார் நகர், அவரக்கரை, சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக்கராஜபுரம், வாணாபாடி, செட்டித்தாங்கல், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி. மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகர்.டி.கே. தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப்பம். தலங்கை, செங்காடுமோட்டூர், செங்காடு, மற்றும் தண்டலம், அதனைச்சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சோளிங்கர்


சோளிங்கர், மேல்வெங்கடாபுரம் துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோளிங்கர், எரும்பி, தாளிக்கால், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ் பாலாபுரம், கொடைக்கல், பெருங்காஞ்சி, ஜம்புகுளம், தலங்கை, மருதாலம், காட்ரம் பாக்கம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை செயற் பொறியாளர்கள் குமரேசன், பாஸ்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.