வாலாஜா அடுத்த தேவதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி (60), பால் வியாபாரி. 

இவர் நேற்று முன்தினம் இரவு தேசிய நெடுஞ்சாலை அருகே கடைக்கு சென்று விட்டு மீண்டும் சாலையை கடந்துள்ளார். 

அப்போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த கார், எதிர்பாராமல் பூபதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீ சார், சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிந்து காருடன் தப்பியவரை தேடிவருகின்றனர்.