விஸ்வகர்மா பூஜை 2022:

 விஸ்வகர்மா என்பவர் தேவலோகத்தின் சிற்பி ஆவார். இவர் தேவதச்சன், தேவசிற்பி என்றும் அறியப்படுகிறார்.வேதங்களின்படி, கடவுள் விஸ்வகர்மா தெய்வீக கட்டிடக்கலைஞர் மற்றும் அனைத்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் வடிவமைப்பாளராக அறியப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்துக்கள் கன்யா சங்கராந்தி அன்று விஸ்வகர்மாவை வழிபடுகிறார்கள், இது பொதுவாக இந்து நாட்காட்டியின் படி பத்ரபத மாதத்தின் கடைசி நாளைக் குறிக்கிறது. இந்த நாள் கிரிகோரியன் நாட்காட்டியில் செப்டம்பர் 16 முதல் 18 வரை ஒத்துள்ளது. இந்த ஆண்டு விஸ்வகர்ம பூஜை செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு விஸ்வகர்ம பூஜைக்கான உகந்த நேரம் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 7:36 முதல் இரவு 9:38 வரை.

மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், திரிபுரா, பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தொழிற்சாலை மற்றும் கடை உரிமையாளர்கள் தங்கள் துறையில் சிறந்து விளங்க இறைவனின் ஆசி வேண்டி இந்த நாளில் பூஜை நடத்துகின்றனர். விஸ்வகர்மா கடவுளின் சிலையுடன், அனைத்து கருவிகள் மற்றும் இயந்திரங்களும் வணங்கப்படுகின்றன.

பகவான் விஸ்வகர்மா உங்களுக்கு அவருடைய சிறந்த ஆசீர்வாதங்களை பொழியட்டும், மேலும் உங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறட்டும். உங்களுக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிய விஸ்வகர்ம பூஜை நல்வாழ்த்துக்கள்.

கடவுளின் கட்டிடக் கலைஞருக்கும், அனைத்துத் திறமைகளின் கடவுளுக்கும் இங்கு பணிவான அஞ்சலி செலுத்துகிறோம். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான விஸ்வகர்மா பூஜை.

வரலாறு


தெய்வம் 'ஸ்வயம்பு' அல்லது சில இந்து வேதங்களில் சுயமாக வெளிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. அவர் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களின் படைப்பாளராகவும், தேவர்கள் மற்றும் தெய்வங்களின் தேர்கள், அரண்மனைகள் மற்றும் ஆயுதங்களின் தெய்வீக கட்டிடக் கலைஞராகவும் கருதப்படுகிறார். அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் கன்யா சங்கராந்தி அன்று பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிற்பிகளால் பகவான் விஸ்வகர்மா வணங்கப்படுகிறார்.

உருவாக்கிய ஆயுதங்கள்


கதாயுதம் - கதன் எனும் அசுரனை திருமால் கொன்றார். அவனுடைய எலும்பிலிருந்து கதாயுதம் என்பதை விசுவகர்மா செய்து தந்தார் என அக்கினி புராணம் கூறுகிறது.

உருவாக்கிய இடங்கள்


பிருந்தாவனத்தில் வீடுகளையும், இந்திரனுக்காக அமராவதி நகரை புதுப்பித்ததாகவும் பிரம்ம புராணம் கூறுகிறது.

சிவபெருமானுக்காக திரிசூலம், திருமாலுக்காக சக்ராயுதம், முருகனுக்காக வேல், குபேரனுக்காக சிவிகை ஆகிய ஆயுதங்களை விசுவகர்மா உருவாக்கி தந்தாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.

ராமாயண காவியத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, விஸ்வகர்மா ஜி ராவணனுக்காக புஷ்பக் விமானத்தையும் ஸ்வர்ண லங்காவையும் கட்டினார் என்று நம்பப்படுகிறது. மகாபாரத காவியத்தின்படி, கிருஷ்ணருக்காக துவாரகை நகரத்தையும், பாண்டவர்களுக்காக இந்திரப்பிரஸ்தத்தையும் உருவாக்கினார்.

இல்லறம்


இவருக்கு சமுக்யா தேவி என்றொரு புதல்வி உண்டு. அவளை சூரிய தேவனுக்கு மணம் செய்வித்தார் விசுவகர்மா. ஆனால் சூரியனின் வெப்பத்தினை தாங்க இயலாமல் சாயா தேவி என்றொரு பெண்ணை தன்னுடைய நிழலிருந்து உருவாக்கி சூரியனுடன் இருக்குமாறு கூறி விசுவகர்மாவிடம் வந்துவிட்டாள். அவளுக்கு விசுவகர்மா கணவனுடன் இணைந்து வாழ அறிவுரை கூறினார். அதனால் சூரிய தேவனை அடைய மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டாள். தன்னுடன் இருப்பது சமுக்யா இல்லை என்பதை உணர்ந்த சூரிய தேவன் விசுவகர்மாவிடம் கேட்டு மாந்துறை வந்தடைந்தார். தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.

இவர் சிவபெருமானுக்கு பிங்களம் எனும் வில்லினையும், திருமாலுக்கு சாரங்கம் எனும் வில்லையும், இந்திரனுக்கு ததிசி முனிவரின் முதுகெழும்பிலிருந்து வஜ்ராயுதத்தினையும் செய்துதந்தார். பிரம்மாவின் படைப்பு தொழிலுக்கு உதவியாக பதினான்கு உலகங்களையும் (லோகங்களையும்) வடிவமைத்தவர்.

சிவன் பார்வதி திருமணத்திற்காக இலங்கையை கடலுக்கு நடுவே அமைத்தார் என்றும், திருமாலின் கிருஷ்ண அவதாரத்தின் பொழுது துவாரகை மற்றும் எமபுரத்தினை அமைத்து தந்தார் எனவும் இந்து நூல்கள் குறிப்படுகின்றன. அத்துடன் சேது பாலத்தினை அமைக்க இராமருக்கு துணையாக நளன் என்ற வானரத்தினை இவர் படைத்தாகவும் கூறப்படுகிறது.

விஸ்வப்பிரம்மம் என்பவர் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகளை உலக நன்மைக்காக உருவாக்கியவர். பிரம்மம் என்றால் தொடக்கம், ஆக்கம், எல்லையில்லாத என்று பொருள்தரும். எனவே உலகத்தின் தொடக்கத்தில் படைப்பு தொழில் செய்ய ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து ரிசிகளை உருவாக்கியவர் என்பதால் விஸ்வ பிரம்மம் என்று அறியப்படுகிறார். சிவபெருமான் சதாசிவ ரூபத்தில் ஐந்து தலைகளுடன் இருப்பதைப் போல இந்த விஸ்வப்பிரம்ம ரூபத்திலும் ஐந்து தலைகளுடன் காணப்படுகிறார். இவர் விராட் விஸ்வப்பிரம்மம் என்றும் அறியப்படுகிறார்.

உருவம்


ஐந்து முகங்களையும், பத்து கைகளையும், நாகாபரணம் மற்றும் புலியுடை தரித்து விஸ்வபிரம்மம் காட்சியளிக்கிறார். அவர் வலது கைகளில் சூலம், சக்கரம், அம்பு, நாகாபரணம், மாலை ஆகியவையும், இடது கைகளில் நாக உடுக்கை, சங்கு, வில், வீணை ஆகியவற்றுடன் செந்தாமரையில் வீற்றிருக்கிறார். அவர் உருவாக்கிய ஐந்து விஸ்வகர்மா ரிசிகளும் அவரிடம் படைப்பு கலையை கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

விஸ்வபிரம்ம துதி


பஞ்சவர்ணம் கொஞ்சுமுகம்ஐந்துபேர்கள்
பரம்னுடைய திருக்கண்ணில் உதயமானார்
கொஞ்சிவரும் கிளி மொழியாள் உமையாள் புத்திரர்
குருவான மனு-மயா-துவஷ்ட-சிற்பி-விஸ்வங்

முக்கியத்துவம்


இந்த நிகழ்வு இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மற்ற பண்டிகைகளைப் போல் அல்லாமல், விஸ்வகர்மா பூஜை ஒரு நாள் மட்டுமே அனுசரிக்கப்படுகிறது. விஸ்வகர்மா பூஜை சூரிய நாட்காட்டியின்படி தீர்மானிக்கப்படுகிறது, மற்ற பண்டிகை தேதிகள் சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

தேவசிற்பி விஸ்வகர்மா வடித்த ஆச்சர்ய திருவுருவம்உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்! 

கர்நாடகாவில் உள்ள உடுப்பி நகரத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற உடுப்பி ஶ்ரீ கிருஷ்ணர் கோவில். இந்த இடத்தில் அமைந்துள்ள மடத்தை பார்ப்பதற்கு ஆசிரமத்தை போன்ற தோற்றம் ஏற்படும். இந்த கோவிலை சுற்றி ஏராளமான கோவில்கள் இருப்பது இப்பகுதியின் தனிச்சிறப்பு. இந்த கோவிலில் இருக்கும் தீர்த்த குண்டத்தின் பெயர் மத்வபுஷ்கர்ணி என்பதாகும். இங்கு தான் சந்திரன் தன்க்கு ஏற்பட்ட சாபம் நீங்க தன்னுடைய 27 மனைவிகளான நட்சத்திரங்களுடன் வந்து வணங்கி சாப விமோசனம் பெற்றான். உடு என்றால் நட்சத்திரம் பா என்றால் தலைவன். உடுபா என்பதே மருவி பின்னாளில் உடுப்பி ஆனது எனவும் கொள்ளலாம். சந்திரன் தன் சாபம் நீங்க இங்கு வந்து வழிபட்டதாலும், ஶ்ரீ கிருஷ்ணரே நட்சத்திரங்களுக்கு எல்லாம் தலைவனாக இருப்பதாலும் இந்த பெயர் உருவானது. 

இந்த கோவில் 13 ஆம் நூற்றாண்டில் வைஷ்ணவ குருவான ஜகத்குரு ஶ்ரீ மாதவாச்சாரி அவர்களால் தோத்ற்றுவிக்கப்பட்டது. வேதாந்தாவின் த்வைத்த பள்ளியை தோற்றுவித்தவரும் இவரே ஆவார். இந்த கோவிலின் வரலாறு மிக சுவரஸ்யமானது. ருக்மணி தேவிக்கு கிருஷ்ண பகவான் சிறு வயதில் எப்படியிருப்பார் என்று பார்க்க விருப்பம் வந்தது. இதனை தேவ சிற்பி விஸ்வகர்மாவிடம் அழைத்து சொன்னபோது அவருடைய விருப்பத்தின் பெயரில் சாளக்கிராம கல்லில் வலது கையில் தயிர்மத்துடனும், இடது கையில் வெண்ணையும் இருப்பது போன்ற திருவுருவத்தை விஸ்வகர்மா படைத்தருளினார். 

மதுரையின் யோக நரசிம்மர் கோவில் இந்த திருவுருவச்சிலை ருக்மணி தேவியால் பூஜிக்கப்பட்டு வந்த நிலையில் துவாரகை கடலில் மூழ்கிய போது பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்த சிலை மத்வருக்கு கிடைத்து, மத்வராலேயே இந்த திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த உடுப்பி கிருஷ்ணருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வழிபட எட்டு சீடர்களை மத்வர் நியமித்தார். இந்த எட்டு சீடர்களும் எட்டு மடங்களை அதாவது, கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம் ஆகியவைகளை நிர்மாணித்து வந்தனர். இந்த எட்டு மடங்களில் ஒவ்வொரு மடமும், இரண்டு மாதங்கள் இந்த கோவிலை நிர்வகிக்க வேண்டும் என்கிற செயல்முறை மத்வர் அவர்களால் உருவாக்கப்பட்டது. Also Read - மகாமகம் குளத்தில் நீராடுவதால் ஏற்படும் அதிசய பலனும் ஆச்சர்ய பின்புலமும் இந்த கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பு யாதெனில், இங்கிருக்கும் கனகதாசருக்கு சில காரணங்களால் இந்த கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது அவர் உடுப்பி கோவிலின் கருவறைக்கு பின்பு நின்று கொண்டு வீணை மீட்டி மனமுருக பாடி வேண்டுவார். இதனை தொடர்ந்து கோவிலின் பின்பக்க சுவர் தாமாகவே இடிந்து, கிருஷ்ணர் தன் உருவத்தை திருப்பி கனகதாசருக்கு காட்சியளித்தார். கனகதாசர் கண்ணனை வணங்க ஒன்பது துவாரங்கள் கொண்ட ஜன்னல் போன்ற பலகணி என்ற அமைப்பு உருவானது. இதனை கனகதண்டி என அழைக்கிறார்கள். இன்றும் பக்தர்கள் இந்த பலகணி வழியாகவே மூலவரான கிருஷ்ணரை வழிபட முடியும் என்பது கூடுதல் ஆச்சர்யம்.