👱 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் 19வது திருத்தச்சட்டம் அமலுக்கு வந்தது.

✈ 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் (Sigmund Jahn) சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.

✍ 1858ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி தந்தி மூலம் முதல் செய்தி அனுப்பப்பட்டது.


பிறந்த நாள் :-


திரு.வி.கல்யாணசுந்தரம்

🏁 கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்டவரும், தமிழ்த் தென்றல் என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தார். 

🏁 இவர் சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இவர் சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். திலகர் தான் இவரது அரசியல் குரு.

🏁 சென்னையில் 1918-ல் முதன்முதலாக தொழிற்சங்கம் உருவானதில் இவரது பங்கு மகத்தானது. 1920-ல் நவசக்தி வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். தன் எழுத்துகளால் தேசபக்தி கனலை மூட்டினார்.

🏁 இவர் புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார். தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார். தமிழ்நாட்டு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்கு தாயாகவும் விளங்கியவர் என்று இவரைப் பாராட்டியுள்ளார் கல்கி.

🏁 இவரே தன்னுடைய பெயரை திரு.வி.க. தமிழ் என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையைத் தோற்றுவித்தார். தமிழ்ப்பணி, நாட்டுப் பணியுடன் சமயப்பணியும் ஆற்றிய திரு.வி.க. 70-வது வயதில் (1953) மறைந்தார்.


அன்னை தெரசா

🌹 அன்னை தெரசா 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓட்டோமான் பேரரசிலுள்ள அஸ்கபில் (தற்போது மாக்கடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜே) பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.

🌹 1950ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.

🌹 1970ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.

🌹 அன்னை தெரசா 1997ஆம் ஆண்டு செம்டம்பர் 5ஆம் தேதி தன்னுடைய 87-வது வயதில் மறைந்தார். அன்னை தெரசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.

இன்றைய நிகழ்வுகள்


683 – உமையா கலீபு முதலாம் யசீதின் இராணுவத்தினர் மதீனாவில் 11,000 பேரைக் கொன்றனர்.

1071 – செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் அனத்தோலியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர்.

1303 – தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்காரைக் கைப்பற்றினான்.

1542 – பிரான்சிசுக்கோ டி ஒரிலானா அமேசா ஆற்றின் வழியே சென்று அத்திலாந்திக் பெருங்கடலை அடைந்தார்.

1748 – அமெரிக்காவின் முதலாவது லூதரனியத் திருச்சபை பிலடெல்பியாவில் நிறுவப்பட்டது.

1768 – ஜேம்ஸ் குக் தனது முதலாவது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து என்டெவர் கப்பலில் ஆரம்பித்தார்.

1789 – பிரான்சியப் புரட்சி: மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை பிரான்சிய நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1791 – நீராவிக் கப்பலுக்கான அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோன் பிட்ச் பெற்றுக் கொண்டார்.

1795 – திருகோணமலை, பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.[1]

1814 – சிலி விடுதலைப் போர்: சிலியில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே சண்டை மூண்டது.

1883 – இந்தோனேசியாவின் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு கடைசித் தடவையாக வெடிக்க ஆரம்பித்தது.

1914 – முதலாம் உலகப் போர்: 20-நாள் முற்றுகையை அடுத்து, செருமானியக் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரான்சிய, பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தது.

1920 – ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் அரசியலமைப்பின் 19-வது திருத்தச்சட்டமூலம் அமுலுக்கு வந்தது.

1922 – கிரேக்க-துருக்கியப் போர் (1919–22): துருக்கிய இராணுவத்தினரின் பெரும் தாக்குதல்களில் கிரேக்கத்தின் முக்கிய பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்டன.

1942 – உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாட்சி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர். இப்படுகொலைகள் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: சார்லஸ் டி கோல் பாரிசினுள் நுழைந்தார்.

1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது.

1970 – ஐக்கிய அமெரிக்காவில் புதிய பெண்ணிய இயக்கம் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி பணி நிறுத்தங்களில் ஈடுபட்டது.

1972 – 22வது ஒலிம்பிக் போட்டிகள் செருமனி, மியூனிக்கில் ஆரம்பமானது.

1977 – பிரெஞ்சு மொழி உரிமை ஆவணம் கியூபெக் சட்டமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1978 – அல்பீனோ லூசியானி முதலாவது அருளப்பர் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1978 – முதலாவது செருமனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.

1993 – யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

1997 – அல்சீரியாவில் 60-இற்கு மேற்பட்டோர் பென் அலி என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.

1999 – உருசியக் குடியரசான தாகெஸ்தானை இசுலாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியதற்குப் பதிலடியாக, உருசியா இரண்டாவது செச்சினியப் போரை ஆரம்பித்தது.

2006 – திருகோணமலை மூதூர் கிழக்கில் இலங்கை விமானப்படைப் போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

இன்றைய பிறப்புகள்


1728 – லாம்பர்ட், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1777)

1743 – அந்துவான் இலவாசியே, பிரான்சிய வேதியியலாளர், உயிரியலாளர் (இ. 1794)

1880 – கியோம் அப்போலினேர், இத்தாலிய-பிரான்சிய எழுத்தாளர் (இ. 1918)

1882 – ஜேம்ஸ் பிராங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1964)

1883 – திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953)

1910 – அன்னை தெரேசா, நோபல் பரிசு பெற்ற மக்கெடோனிய-இந்திய அருட்சகோதரி (இ. 1997)

1918 – காத்தரைன் ஜான்சன், அமெரிக்க இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 2020

1927 – அ. அமிர்தலிங்கம், ஈழத்து அரசியல்வாதி (இ. 1989)

1933 – வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்து தவில் கலைஞர் (இ. 1978)

1934 – அ. ஜெ. கனகரத்னா, ஈழத்து இலக்கியவாதி (இ. 2006)

1950 – பொன். சிவகுமாரன், ஈழ விடுதலைப் போராட்டத்தில் நஞ்சு அருந்தி உயிர் நீத்த முதலாவது போராளி (இ. 1974)

1954 – ராஜ்கிரண், இந்தியத் திரைப்பட இயக்குனர், நடிகர்

1956 – மேனகா காந்தி, இந்திய அரசியல்வாதி

1964 – சுரேஷ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.

1971 – தாலீயா, மெக்சிக்கோ-அமெரிக்கப் பாடகி, நடிகை

1980 – கிறிஸ் பைன், அமெரிக்க நடிகர்

இன்றைய இறப்புகள்


1723 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (பி. 1632)

1865 – யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (பி. 1791)

1910 – வில்லியம் ஜேம்ஸ், அமெரிக்க மெய்யியலாளர், உளவியலாளர் (பி. 1842)

1918 – கியோம் அப்போலினேர், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1880)

1923 – எர்த்தா அயர்டன், பிரித்தானிய, பொறியியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1854)

1951 – அபலா போஸ், வங்காள சமூக சேவகர் (பி. 1864)

1969 – எஸ். எஸ். வாசன், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1904)

2012 – த. சரவணத் தமிழன், தனித்தமிழ் அறிஞர், நூலாசிரியர்

2014 – மா. ரா., எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட கதை வசனகர்த்தா

இன்றைய சிறப்பு நாள்


பெண்கள் சமத்துவ நாள் (ஐக்கிய அமெரிக்கா)