1897ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இந்தி இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த தீரேந்திர வர்மா, உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் பிறந்தார்.


முக்கிய தினம் :-


உலக தொலைத்தொடர்பு தினம்

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத்தொடர்பு துறையும் ஒன்றாகும். தகவல் தொடர்புக்கென முதன்முதலாக 1865ம் ஆண்டு மே 17ஆம் தேதி பாரிஸில் பன்னாட்டு தந்தி ஒன்றியம் நிறுவப்பட்டது.

பின்பு, உலக தொலைத்தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இணையம் மற்றும் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக தொலைத்தொடர்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மேலும், இச்சங்கம் உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.


உலக உயர் இரத்த அழுத்த தினம்

உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் நோயினால் (இருதய நோய்) ஏற்படும் இறப்பு விகிதத்திற்கான முக்கிய காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது.

உலகத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களில், 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக அறிவித்திருக்கிறது.


பிறந்த நாள் :-


எட்வர்டு ஜென்னர்

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த எட்வர்டு ஜென்னர் 1749ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இங்கிலாந்தின் பெர்க்லி நகரில் பிறந்தார்.

ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் உள்ளவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால், அதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை.

பிறகு ஜென்னர் பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார். அதை சோதித்துப் பார்க்க தனது தோட்டக்காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட நினைத்தார்.

தனது பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கவ் பாக்ஸ் கிருமியை எடுத்து ஊசிமூலம் அச்சிறுவனின் உடலுக்குள் செலுத்தி கவ் பாக்ஸ் நோயை ஏற்படுத்தினார். சிறுவனும் நோயால் தாக்கப்பட்டான். சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில் செலுத்தினார். ஆனால், அந்த சிறுவனை பெரியம்மை தாக்கவில்லை.

இதன்மூலம் கவ் பாக்ஸ் கிருமிகளை மேன்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை நிரூபித்தார்.

கோடிக்கணக்கான உயிர்களை காத்தவரும், நோய் தடுப்பூசிகளின் தந்தை என்று போற்றப்படுபவருமான எட்வர்டு ஜென்னர் 73வது வயதில் (1823) மறைந்தார்.


இன்றைய தின நிகழ்வுகள்


1521 – பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.

1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினார்.

1792 – நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

1805 – முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார்.

1814 – நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது. டென்மார்க் இளவரசர் கிறித்தியான் பிரெடெரிக் மன்னராக முடிசூடினார்.

1814 – மொனாக்கோவின் ஆட்சி பிரான்சிடம் இருந்து ஆஸ்திரியாவுக்குக் கைமாறியது.

1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

1902 – கிரேக்க தொல்லியலாளர் வலேரியோசு ஸ்தாயிசு பண்டைய தொடர்முறைக் கணினி ஆன்ட்டிகித்தீரா பொறிமுறையைக் கண்டுபிடித்தார்.

1915 – பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரைக் கைப்பற்றியது.

1946 – இலங்கையின் புதிய சோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளும் அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.[1]

1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துள் சென்று அதனுடன் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.

1972 – இலங்கையில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரசு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள் கூடி தமிழர் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினர். இது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனது.

1974 – அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

1980 – மாணவர் போராட்டத்தை அடக்குவதற்காக தென் கொரியாவில் இராணுவத் தளபதி சுன் தூ-குவான் ஆட்சியைக் கைப்பற்றி இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

1983 – லெபனானில் இருந்து இசுரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இசுரேல், அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.

1987 – ஈரான் – ஈராக் போர்: ஈராக்கிய போர் விமானம் ஒன்று அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர், 21 பேர் காயமடைந்தனர்.

1990 – உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை தற்பால்சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.

1992 – தாய்லாந்து பிரதமர் சுச்சிந்தா பிரப்பிராயூனுக்கு எதிராக நடந்த மூன்று-நாள் எதிர்ப்புப் போராட்டங்களில் இராணுவம் சுட்டதில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

1994 – மலாவிவில் முதல் தடவையாக பல-கட்சி பொதுத் தேர்தல் இடம்பெற்றது.

1997 – சயீர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1998 – தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

2004 – அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.

2006 – அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் ஒரிசுகானி மெக்சிகோ வளைகுடாவில் மூழ்கியது.

2007 – வட கொரியாவில் இருந்து தென் கொரியா வரையான தொடருந்து சேவை 1953 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இடம்பெற்றது.

2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

2014 – வடக்கு வாவோசில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1749 – எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. 1823)

1836 – ஜோசப் நார்மன் இலாக்கியர், ஆங்கிலேய அறிவியலாளர், வானியலாளர் (இ. 1920)

1858 – மேரி அடேலா பிளேக், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1944)

1873 – ஞானியார் அடிகள், சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, உரையாசிரியர் (இ. 1942)

1880 – சக்கரவர்த்தி நயினார், சமண அறிஞர் (இ. 1960)

1897 – தீரேந்திர வர்மா, இந்தியக் கவிஞர், மொழியியல் ஆய்வாளர் (இ. 1973)

1920 – பி. சாந்தகுமாரி, தென்னிந்திய நடிகை, பாடகி

1938 – கே. ஜமுனா ராணி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1945 – பி. எஸ். சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர்

1956 – சீனு மோகன், தமிழக மேடை, திரைப்பட நடிகர் (இ. 2018)

1967 – முகம்மது நசீது, மாலைத்தீவுகளின் 4வது அரசுத்தலைவர்

1974 – செந்தில் ராமமூர்த்தி, அமெரிக்க நடிகர்

1988 – நிக்கி ரீட், அமெரிக்க நடிகை, பாடகி

இன்றைய தின இறப்புகள்


1870 – இராதானாத் சிக்தார், வங்காள கணிதவியலாளர் (பி. 1813)

1930 – எர்பெர்ட்டு குரோலி, அமெரிக்கக் கல்வியாளர், இதழாளர் (பி. 1869)

1961 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)

1998 – சரோஜினி யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

2007 – நகுலன், தமிழக எழுத்தாளர் (பி. 1921)

2014 – சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்

2014 – சௌகான் மகாலத், லாவோஸ் அரசியல்வாதி (பி. 1955)

2021 – க. துரைரத்தினசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1941)

2021 – கி. ராஜநாராயணன், தமிழக எழுத்தாளர் (இ. 1923)

இன்றைய தின சிறப்பு நாள்


குழந்தைகள் நாள் (நோர்வே)

அரசமைப்பு நாள் (நவூரு)

விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)

உலக தகவல் சமூக நாள்

உலக உயர் இரத்த அழுத்தம் நாள்