👉 1913ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.


முக்கிய தினம் :-


உலக பத்திரிக்கை சுதந்திர தினம்

📝 பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3ஆம் தேதி பத்திரிக்கை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

📝 மனித உரிமைகள் சாசனம் பகுதி 19-ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

📝 அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிக்கையையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது.


நினைவு நாள் :-


ஜாகீர் உசேன்

🌟 இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவரான ஜாகீர் உசேன் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.

🌟 இவர் சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். ஆதாரக் கல்வி முறை குறித்தும், கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் 'குடியரசு' நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

🌟 காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்திற்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார்.

🌟 1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பீகார் மாநில ஆளுநராகப் பதவியேற்றார். 1962ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவராகவும், 1967ஆம் ஆண்டு இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்' என்று கூறியவர்.

🌟 இவருக்கு பத்ம விபூஷண் விருதும் (1954), பாரத ரத்னா விருதும் (1963) வழங்கப்பட்டுள்ளது. நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாகீர் உசேன் தனது 72வது வயதில் 1969ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன்

🎤 சோல் இசையின் தந்தை ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன் (James Joseph Brown) 1933ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தென் கரோலினாவில் (அமெரிக்கா) உள்ள பார்ன்வெலில் பிறந்தார்.

🎤 இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிக முக்கியமானவர். மேலும், பலத்த குரலில் பாடுவது, பாடிக்கொண்டே நடனம் ஆடுவது போன்று தனக்கென தனித்தன்மையை பெற்றிருந்தார்.

🎤 பாடகர், பாடலாசிரியர், பாடற்குழுத் தலைவர், பாடல் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர். இதுமட்டுமல்லாமல் ராக், ஜாஸ், டிஸ்கோ, டான்ஸ், இலத்திரனிசை, ரெகே, ஆஃப்ரோ-பீட், ஹிப் ஹாப் போன்ற இசை முறைகளிலும் இவர் தனது சுவட்டைப் பதித்துச் சென்றுள்ளார்.

🎤 திரைப்படத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன் என்ற பெயர் கொண்ட இவர் தனது 73வது வயதில் (2006) மறைந்தார்.


சுஜாதா

✍ தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா 1935ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் எஸ்.ரங்கராஜன்.

✍ 1962ஆம் ஆண்டு இவருடைய, இடது ஓரத்தில் என்ற சிறுகதை குமுதம் என்ற இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. அதன் பிறகு தன் மனைவி பெயரான சுஜாதா-வின், பெயரை தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.

✍ இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.

✍ சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்த இவர் தனது 72வது வயதில் (2008) மறைந்தார்.



இன்றைய தின நிகழ்வுகள்


1481 – கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1616 – லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1715 – எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது.

1791 – ஐரோப்பாவின் முதலாவது நவீன அரசியலமைப்புச் சட்டம் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் நடைமுறைக்கு வந்தது.

1802 – வாசிங்டன், டி. சி. நகரமாக்கப்பட்டது.

1808 – சுவீடன் சுவீபோர்க் கோட்டையை உருசியாவிடம் இழந்தது.

1808 – முதல் நாள் கிளர்ச்சியில் ஈடுபட்ட மத்ரித் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1814 – எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்ட பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் போர்ட்டோஃபெராய்யோ நகரை அடைந்தான்.

1815 – டொலெண்டீனோ போரில் நேப்பில்ஸ் மன்னன் யோக்கிம் முராட் ஆஸ்திரியர்களால் தோற்கடிக்கப்பட்டான்.

1837 – ஏதென்சு பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

1855 – அமெரிக்கர் வில்லியம் வாக்கர் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து 60 பேருடன் நிக்கராகுவாவைக் கைப்பற்றப் புறப்பட்டார்.

1860 – பதினைந்தாம் சார்லசு சுவீடன் மன்னராக முடிசூடினார்.

1879 – யாழ்ப்பாணம், கரவெட்டியில் வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். கோயில் முழுவதும் எரிந்து சாம்பரானது.[1]

1901 – புளோரிடாவின் ஜாக்சன்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்தனர்.

1913 – இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.

1920 – சியார்சியாவில் போல்செவிக் இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.

1921 – வட அயர்லாந்து, தெற்கு அயர்லாந்து என அயர்லாந்து இரண்டாகப் பிரிந்தது.

1928 – சீனா, சினானில் 12 சப்பானியப் பொது மக்கள் சீனப் படைகளினால் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக அடுத்தடுத்த நாட்களில் 2,000 வரையான சீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[2]

1939 – சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியை ஆரம்பித்தார்.

1941 – பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் துளகி தீவைக் கைப்பற்றினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான் படை கேப் அர்கோனா, தீல்பெக், இடாய்ச்சுலாந்து ஆகிய சிறைக்கப்பல்களை தாக்கி மூழ்கடித்தது.

1962 – டோக்கியோவில் பயணிகள் தொடருந்துகள் சரக்கு தொடருந்துடன் மோதியதில் 160 பேர் உயிரிழந்தனர்.

1973 – சிக்காகோவின் 1,51 அடி உயர 108-மாடி சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கட்டடமாக அறிவிக்கப்பட்டது.

1978 – முதலாவது எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அமெர்க்காவில் அனுப்பப்பட்டது.

1986 – கொழும்பு விமான நிலையத்தில் எயர்லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர்.

1999 – ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லகோமா நகரை பெரும் சூறாவளி தாக்கியதில் 45 பேர் கொல்லப்பட்டும் 665 பேர் காயமும் அடைந்தனர்.

2001 – 1947 ஆண்டில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய அமெரிக்கா ஆணையத்தில் உறுப்புரிமையை இழந்தது.

2002 – இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜலந்தரில் இந்திய வான்படையின் மிக்-21 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்து, 17 பேர் காயமடைந்தனர்.

2006 – ஆர்மீனியாவின் பயணிகள் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

2016 – கனடா, ஆல்பர்ட்டாவில் மெக்மரி கோட்டையில் தீ பரவியதில் 88,000 பேர் இடம்பெயர்ந்தனர். 2,400 வீடுகள் அழிந்தன.

இன்றைய தின பிறப்புகள்


1469 – நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1527)

1896 – வே. கி. கிருஷ்ண மேனன், இந்திய அரசியல்வாதி (இ. 1974)

1898 – கோல்டா மேயர், இசுரேலின் 4வது பிரதமர் (இ. 1978)

1899 – டி. எஸ். சொக்கலிங்கம், தமிழக இதழியலாளர், எழுத்தாளர், விடுதலைப் போராளி (இ. 1966)

1903 – பிங்கு கிராசுபி, அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1977)

1919 – பீட் சீகர், அமெரிக்கப் பாடகர் (இ. 2014)

1920 – அசலா சச்தேவ், இந்தியத் திரைப்பட நடிகை (இ. 2012)

1924 – யெகுடா அமிசாய், செருமனிய-இசுரேலியக் கவிஞர் (இ. 2000)

1933 – ஜேம்ஸ் ப்ரௌன், சோல் இசையின் தந்தை என அழைக்கப்பட்ட அமெரிக்க இசை வல்லுநர் (இ. 2006)

1935 – சி. பாலசுப்பிரமணியன், தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1998)

1935 – சுஜாதா, தமிழக எழுத்தாளர் (இ. 2008)

1951 – அசோக் கெலட், இராசத்தானின் 21வது முதலமைச்சர்

1955 – ரகுபர் தாசு, சார்க்கண்ட் மாநிலத்தின் 10வது முதலமைச்சர்

1959 – உமா பாரதி, மத்தியப் பிரதேசத்தின் 16வது முதலமைச்சர்

1977 – மரியாம் மீர்சாக்கானி, ஈரானியக் கணிதவியலாளர் (இ. 2017)

1988 – அகில், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இன்றைய தின இறப்புகள்


1410 – எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர்

1481 – இரண்டாம் முகமது, உதுமானியப் பேரரசர் (பி. 1432)

1680 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1627)

1934 – காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, தமிழகக் கருநாடக இசைப் பாடகர்

1957 – டபிள்யூ. ஏ. சில்வா, இலங்கையின் சிங்கள புதின எழுத்தாளர் (பி. 1890)

1969 – சாகீர் உசேன், இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் (பி. 1897)

1971 – ஆர். நடராஜ முதலியார், தமிழகத் திரைப்படத்துறையின் முன்னோடி, ஊமைத் திரைப்படங்களைத் தயாரித்தவர் (பி. 1885)

1981 – நர்கிசு, இந்திய நடிகை (பி. 1929)

1986 – மாத்தளை அருணேசர், இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1905)

2005 – ஜெகத் சிங் அரோரா, இந்தியத் தரைப்படை அதிகாரி (பி. 1916)

2009 – பி. ராஜம், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1922)

2014 – கேரி பெக்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1930)

இன்றைய தின சிறப்பு நாள்


உலக பத்திரிகை சுதந்திர நாள்