வாலாஜாபேட்டையில், கடும் வெய்யிலுக்கு பெண் உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், நவல்பூரை சேர்ந்தவர் மணி, 65, விவசாயி; இவர் மனைவி சந்தியா, 55; இவர், நேற்று முன்தினம் பிற்பகல், 11:00 மணிக்கு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். சிகிச்சை முடிந்து பிற்பகல், 3:00 மணிக்கு வெளியே வந்தவர், கடும் வெயிலில் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றார். 

அப்போது அவர், மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 

வாலாஜாபேட்டை போலீசார் விசாரணையில், கடும் வெயில் தாக்கத்தில் அவர் இறந்தது தெரியவந்தது.