ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 28), வியாபாரி. இவர் வழக்கம்போல் மோட்டார்சைக்கிளில் வியாபாரத்துக்கு சென்று விட்டு, மாலை வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆற்காட்டை அடுத்த கடப்பந்தாங்கல் அருகே வந்தபோது அந்த வழியாக முன்னால் சென்ற ஒரு டிராக்டர் மீது கோபிநாத் ஓட்டிய மோட்டார்சைக்கிள் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

அதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.