Collector surprise inspection of fish market

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தநிலையில் ராணிப்பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு கடைக்காரர்கள் மந்தாரை இலையில் மீன் மற்றும் இறைச்சி பார்சல் செய்து கொடுப்பதை கண்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் பாத்திரம் கொண்டு வந்து இறைச்சி வாங்கி சென்ற பொதுமக்களையும் பாராட்டினார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து அங்கிருந்த கடைக்காரர்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.