👉 1859ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி இந்திய இராணுவத் தளபதி தாந்தியா தோபே மறைந்தார்.

🏁 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் ஜி. சுப்பிரமணிய ஐயர் மறைந்தார்.

🚢 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயார்க் வந்து சேர்ந்தனர்.


முக்கிய தினம் :-


உலக பாரம்பரிய தினம்

🍀 உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

🍀 1982ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் தேதி சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites) கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டே யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய (அ) மரபு தினமாக மாறியது.


நினைவு நாள் :-


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

🌟 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

🌟 இவர் காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.

🌟 இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதிகளை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற 'சார்பியல் கோட்பாடு' பிறந்தது.

🌟 குவாண்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.

🌟 ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🌟 இவர் 'அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்' என்று உறுதியாக கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுவை நினைத்து வேதனைக்கு ஆளானார். இவர் தனது 76வது வயதில் 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


மகரிஷி கர்வே

🌸 மகளிர் மேம்பாட்டுக்கு பாடுபட்ட மகரிஷி தோண்டு கேசவ் கர்வே 1858ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கிராமத்தில் பிறந்தார்.

🌸 இவர் விதவைத் திருமணங்கள் நடத்துவதும், இதுகுறித்து பிரச்சாரம் செய்வதும் மட்டுமே அவர்களுக்கு நிரந்தரத் தீர்வாகாது என்பதை உணர்ந்து, அவர்களுக்கு கல்வி கற்பித்து, சொந்தக் காலில் நிற்க வைப்பது அவசியம் என தீர்மானித்து, இதற்காக அனாத் பாலிகாஷ்ரம் என்ற அமைப்பை தொடங்கினார்.

🌸 பெண்களுக்காக பல்கலைக்கழகம் தொடங்க முடிவு செய்தார். இவருடைய செயல்களுக்கு மகாத்மா காந்தியும் ஆதரவு அளித்து வந்தார். 1955ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றார். 1958ஆம் ஆண்டு நூறாவது வயதில் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

🌸 மகரிஷி கர்வே என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் 104வது வயதில் (1962) மறைந்தார்.


ஜார்ஜ் ஹிட்சிங்ஸ்

🌷 கீமோதெரபி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 1905ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் ஹோக்வியம் என்ற பகுதியில் பிறந்தார்.

🌷 1944ஆம் ஆண்டு இவர் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 2,6-டைஅமினோப்யூரின் மற்றும் பி-குளோரோ ஃபீனாக்ஸி டைஅமினோ பைரிமிடின் உள்ளிட்டவைகளை ஆராய்ச்சி செய்து வந்தார்.

🌷 கீமோதெரபிக்கான மருந்துப் பொருட்கள், பல்வேறு சிகிச்சைகளுக்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான முக்கிய கோட்பாடுகளை அவருடைய குழு வெளியிட்டது. இந்த கோட்பாடுகளை கண்டறிந்ததற்காக அவர்களுடன் கூட்டாக 1988ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🌷 மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் மனிதர்களுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 92வது வயதில் (1998) மறைந்தார்.


இன்றைய தின நிகழ்வுகள்


1025 – போலசுலாவ் சுரோப்றி போலந்தின் முதலாவது மன்னராக முடி சூடினார்.1506 – இன்றைய புனித பேதுரு பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

1521 – மார்ட்டின் லூதருக்கு எதிரான விசாரணைகள் இரண்டாம் நாளாக இடம்பெற்றது. தனது லூதரனியம் பற்றிய கற்பித்தலை நிறுத்த அவர் உடன்படவில்லை.

1797 – நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.

1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

1864 – புருசிய-ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர் டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் மாகாணத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அடுத்து டென்மார்க் இம்மாகாணத்தை இழந்தது.

1880 – மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் உயிரிழந்தனர்.

1897 – கிரேக்கத்திற்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது.

1902 – குவாத்தமாலாவில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1909 – ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.

1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.

1930 – பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: யப்பானின் டோக்கியோ, யோக்கோகாமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1946 – அனைத்துலக நீதிமன்றம் முதல் தடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.

1949 – அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1954 – ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1955 – 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.

1958 – இலங்கையில் பண்டா-செல்வா ஒப்பந்தம் முறிவடைந்தது.

1980 – சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். ராபர்ட் முகாபே பிரதமரானார்.

1983 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.

1993 – பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.

1996 – லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இசுரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007 – பகுதாது நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

2018 – சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் முசுவாத்தி நாட்டின் பெயர் இனிமேல் எசுவாத்தினி என அழைக்கப்படும் என அறிவித்தார்.

2021 – கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன்களைத் தாண்டியது.[1]

இன்றைய தின பிறப்புகள்


1838 – பவுல் எமில் புவபோதிரான், பிரான்சிய வேதியியலாளர் (இ. 1912)1858 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)

1858 – தோண்டோ கேசவ் கார்வே, இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 1962)

1883 – சாமிக்கண்ணு வின்சென்ட், தமிழகத் திரைப்பட வெளியீட்டாளர், தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1942)

1884 – ஜான் ஆன்வெல்ட், எசுத்தோனிய அரசியல்வாதி (இ. 1937)

1905 – ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1998)

1910 – மால்கம் ஆதிசேசையா, இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர் (இ. 1994)

1919 – எசுத்தர் அவுவா ஒக்லூ, கானா தொழிலதிபர் (இ. 2002)

1941 – மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ், அயர்லாந்தின் 9வது அரசுத்தலைவர்

1949 – பென் ஹொம்ஸ்சுடொரோம், நோபல் பரிசு பெற்ற பின்லாந்து பொருளாதார நிபுணர்

1967 – மரியா பெல்லோ, அமெரிக்க நடிகை, எழுத்தாளர்

1973 – ஹாய்லி கெப்ரசிலாசி, எத்தியோப்பிய ஓட்டப் பந்தய வீரர்

இன்றைய தின இறப்புகள்


1859 – தாந்தியா தோபே, இந்திய இராணுவத் தளபதி (பி. 1814)1916 – ஜி. சுப்பிரமணிய ஐயர், இந்திய இதழியலாளர் (பி. 1855)

1955 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1879)

1973 – ஆல்பிரெடு ஆரிசன் ஜாய், அமெரிக்க வானியலாளர் (பி. 1882)

இன்றைய தின சிறப்பு நாள்


நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்விடுதலை நாள் (சிம்பாப்வே, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1980)

நண்பர்கள் நாள் (பிரேசில்)

கண்டுபிடிப்புகள் நாள் (யப்பான்)

இராணுவ நாள் (ஈரான்)