👉 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி ஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் (Kofi Annan) கானாவின் (ஆப்பிரிக்கா) குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தார்.

👉 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்தார்.

👉 1894ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி வந்தே மாதரம் பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி மறைந்தார்.

👉 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி லியாகத்-நேரு ஒப்பந்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டன.


முக்கிய தினம் :-


சர்வதேச ரோமானிய தினம்
👉 சர்வதேச ரோமானிய தினம் ஏப்ரல் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1990ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ரோமானிய மக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.


நினைவு நாள் :-


மங்கள் பாண்டே

👉இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.

👉1857ல் சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.

👉இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைபிரிவு கலைக்கப்பட்டது.

👉பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

👉மங்கள் பாண்டேவின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. Raising என்ற திரைப்படம் 2005ல் வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.


பிறந்த நாள் :-


மெல்வின் கால்வின்

👉 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரி வேதியியலாளர் மெல்வின் எல்லிஸ் கால்வின் (Melvin Ellis Calvin) 1911ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் செயின்ட் பால் நகரில் பிறந்தார்.

👉 இவர் 1931-ல் பட்டம் பெற்ற பிறகு, ஹாலோஜன்களின் எலக்ட்ரான் நாட்டம் (Affinity of Halogens) என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையுடன் இவரது ஆராய்ச்சிப் பயணம் தொடங்கியது.

👉 இவர் ஒளிச்சேர்க்கையின்போது தாவரத்துக்குள் கார்பன் பயணிக்கும் பாதையை ஆண்ட்ரூ பென்சன், ஜேம்ஸ் பாஷம் ஆகியோருடன் இணைந்து கண்டறிந்தார். இதற்கு கால்வின் சுழற்சி என்று பெயரிடப்பட்டது.

👉 ஒளிச்சேர்க்கை குறித்த இந்த ஆராய்ச்சிக்காக கால்வினுக்கு 1961-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்நாள் இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த கால்வின் 85-வது வயதில் (1997) மறைந்தார்.


மகாவீரர்

👉 சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் சைவ மதத்துறவி மகாவீரர் கி.மு. 599 வருடம், இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகிலுள்ள குண்டா என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் வர்த்தமானர் ஆகும்.

👉 மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு, சாலா என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து இவர் மகாவீரர் (பெரும்வீரர்) என அழைக்கப்பட்டார்.

👉 இவர் தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பி, இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார்.

👉 ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் தன்னுடைய 72-வது வயதில் (கி.மு.527) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


217 – உரோமைப் பேரரசர் கரகல்லா படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் அவரது பிரிட்டோரியக் காவல்படைத் தலைவர் மார்க்கசு மாக்ரீனசு பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

876 – டைர் அல்-ஆக்கில் சமர் பக்தாதை சபாரித்துகளிடம் வீழாமல் பாதுகாத்தது.

1232 – மங்கோலிய–சின் போர்: மங்கோலியர் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் மீது முற்றுகையை ஆரம்பித்தனர்.

1277 – உவேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது.

1767 – தாய்லாந்தின் அயூத்தியா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது.

1820 – பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது.

1832 – முன்னூறு அமெரிக்கப் படையினர் மிசூரியின் செயின்ட் லூயிசில் இருந்து சவுக் என்ற தொல்குடி அமெரிக்கர்களுடன் போரிடுவதற்காக அனுப்பப்பட்டனர்.

1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டார்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.

1866 – ஆத்திரியப் பேரரசுக்கு எதிராக இத்தாலியும் புருசியாவும் அணி திரண்டன.

1867 – முதலாவது எக்ஸ்போ கண்காட்சி பாரிசு நகரில் ஆரம்பமானது.

1886 – வில்லியம் கிளாட்ஸ்டோன் அயர்லாந்தின் சுயாட்சி சட்டமூலத்தை பிரித்தானிய மக்களவையில் சமர்ப்பித்தார்.

1906 – ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இறந்தார்.

1911 – இடச்சு இயற்பியலாளர் எயிக் ஆன்சு மீக்கடத்துதிறனைக் கண்டுபிடித்தார்.

1913 – அமெரிக்க மேலவைக்கு நேரடித் தேர்தல் நடத்துவதகு சட்டமியற்றப்பட்டது.

1918 – முதலாம் உலகப் போர்: நடிகர்கள் டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், சார்லி சாப்ளின் ஆகியோர் போருக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

1919 – பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி தில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1924 – இசுலாமிய நீதிமன்றங்கள் துருக்கியில் இல்லாதொழிக்கப்பட்டன.

1929 – இந்திய விடுதலை இயக்கம்: தில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகை: [[சோவியத் ஒன்றியம்|சோவியத் படையினர் லென்ன்கிராதுக்கான தொடருந்துப் பாதையை அமைத்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.

1943 – அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் ஊதியங்களையும், பொருட்களின் விலைகளையும் முடக்கினார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் அனோவர் நகரில் 4,000 அரசியல் கைதிகளை ஏற்றிச் சென்ற தொடருந்து மீது தவறுதலான வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தப்பியவர்கள் நாட்சிகளால் கொல்லப்பட்டனர்.

1950 – இந்தியாவும் பாக்கித்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1954 – கனடிய வான்படை விமானம் ஒன்று திரான்சு கனடா விமானம் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.

1954 – தென்னாப்பிரிக்காவின் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.

1960 – இரண்டாம் உலகப் போரின் பின்னர் இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்ட செருமானியப் பிரதேசங்களை 280 மில்லியன் மார்க்குகளுக்கு கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் நெதர்லாந்தும் மேற்கு செருமனியும் கையெழுத்திட்டன.

1961 – பாரசீக வளைகுடாவில் டாரா என்ற கப்பலில் பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 238 பேர் கொல்லப்பட்டனர்.

1970 – இசுரேல் விமானங்கள் எகிப்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டுகளை வீசியதில் 46 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1985 – போபால் பேரழிவு: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.

1993 – மாக்கடோனியக் குடியரசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

2000 – அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் உயிரிழந்தனர்.

2004 – தார்ஃபூர் போர்: சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்


1732 – டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1796)

1864 – அபலா போஸ், மேற்கு வங்க சமூக சேவையாளர் (இ. 1951)

1892 – ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1970)

1892 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை (இ. 1979)

1911 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1997)

1917 – எஸ். இராமநாதன், தமிழக கருநாடக வாய்ப்பாட்டு, வீணை கலைஞர் (இ. 1988)

1938 – கோபி அன்னான், கானா நாட்டு பொருளியலாளர், ஐக்கிய நாடுகளின் 7வது பொதுச் செயலர்

1949 – ஜோன் மேடென், ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

1954 – கோ. வா. உலோகநாதன், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2007)

1983 – அல்லு அர்ஜுன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1988 – நித்யா மேனன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை, பின்னணிப் பாடகி

இன்றைய தின இறப்புகள்


1461 – ஜியார்ஜ் வான் பியூயர்பக், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1423)

1857 – மங்கள் பாண்டே, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீரர் (பி. 1827)

1894 – பங்கிம் சந்திர சட்டர்ஜி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (பி. 1838)

1964 – காருக்குறிச்சி அருணாசலம், தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1907)

1968 – அரோல்டு டி. பாப்காக், அமெரிக்க வானியலாளர் (பி. 1882)

1969 – சினைதா அக்சென்சியேவா, உக்ரைனிய வானியலாளர் (பி. 1900)

1973 – பாப்லோ பிக்காசோ, எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1881)

1973 – நீலகண்ட ஸ்ரீராம், பிரம்மஞான சபை தலைவர் (பி. 1889)

1989 – ஏ. எம். ராஜா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1929)

1992 – டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர் (பி. 1907)

2008 – சரண் ராணி பாக்லீவால், இந்துத்தானி இசை, சரோத் இசைக் கலைஞர் (பி. 1929)

2013 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1925)

2015 – ஜெயகாந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1934)

2015 – நாகூர் இ. எம். ஹனீஃபா, தமிழக இசுலாமியப் பாடகர் (பி. 1925)

2016 – எலிசபெத் உரோயமர், அமெரிக்க வானியலாளர் (பி. 1929)

இன்றைய தின சிறப்பு நாள் 


புத்தர் பிறந்தநாள் (யப்பான்)

பன்னாட்டு உரோமா நாள்