ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். இவரது மனைவி கவிதா இவர்களுக்கு மோனா மிருதன்யா என்ற 6 வயது பெண் குழந்தையும், பிரனேஷ் என்ற 3 வயது ஆண் குழந்தைகள் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் கவிதா ஆகியோரின் இரண்டாவது குழந்தையான பிரனேஷ் என்பவருக்கு இன்று மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனது மகனின் மூன்றாவது பிறந்தநாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் முகாமில் பங்கேற்றிருந்த மாற்றுத்திறனாளிகளுடன் கொண்டாடினர்.

தனது மூன்று வயது நிரம்பிய பிரனேஷ் மற்றும் அவரது சகோதரி மோனா மிருதன்யா ஆகியோர் 300க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு, கேக், குடிநீர் பாட்டில்களை வழங்கி தனது மகனின் பிறந்தநாளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மாவட்ட ஆட்சியரின் மகன் தனது பிறந்தநாளுக்கு அனைவருக்கும் கேக் மற்றும் உணவு குடிநீர் பாட்டில்களை வழங்கி கொண்டாடிய விதத்தை மாற்றுத்திறனாளிகள் பெற்றுக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதிலும் பல தரப்பட்ட மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.