மனிதர்கள் மனம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது. கட்டுபாடற்ற மனநிலையைக் (Uncontrolled Mind); ஒருமுகப்பட்ட(concentrated Mind); மனமற்ற நிலை (Destroyed Mind). இம்மூன்று நிலைகளையேப் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று விதத் தெய்வங்களாக நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர்.

பிரம்மா:


கட்டுபாடற்ற மனநிலையைக் (Uncontrolled Mind) குறிக்கும். எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் இதனால் அறிவு பெருகிக் கொண்டே இருப்பதனால் "சரஸ்வதியை பிரம்மாவின் மனைவியாக கல்விக்கான கடவுளாக உருவகப்படுத்தியுள்ளனர். பிரம்மாவின் வாகனம் அன்னபட்சி. அன்னபட்சி என்பது ஒர் கற்பனை. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்வதுதான் சாதாரண மனிதர்களின் நிலை. எனவேதான் பிரம்மாவிற்குக் கோயில் கிடையாது.

விஷ்ணு:


ஒருமுகப்பட்ட (concentrated Mind) மனநிலையைக் குறிக்கும். இந்த மனநிலையில் நாம் செயல்களைச் செய்யும் பொழுது பெயர், புகழ் சொத்துக்கள் அதிகமாகச் சேரும். ஆகையால் செல்வத்தின் அதிபதியான ஸ்ரீதேவி, பூதேவியை விஷ்ணுவின் மனைவியாகக் குறிப்பிடுகின்றனர். விஷ்ணுவின் வாகனமாகக் கருடன், எவ்வளவு உயரப் பறந்தாலும், பூமியில் உள்ள சிறு பூச்சிகளைக் கூடக் கொத்திச் சென்று விடும். இந்த நிலையை அடைய வேண்டுமானால் ஏதாவது ஒர் குறிப்பிட்டப் புள்ளியில் மனதை வைத்துப் பயிற்சி செய்ய வேண்டும்.

சிவன்:


மனமற்ற (Destroyed Mind) நிலையைக் குறிக்கும். இந்த நிலையில் மகா சக்திகள் வசப்படும். அதனால்தான் ஆ ராசக்தியைச் சிவனின் மனைவியாக உருவகப்படுத்தி உள்ளனர். காளைமாடு சிவனின் வாகனமாகக் கூறுகின்றனர். காளை மாட்டின் இயல்பு என்னவென்றால், அதை வண்டியில் பூட்டினாலும் சரி, செக்கில் மாட்டினாலும் சரி அதை இழுத்துச் சென்று கொண்டே இருக்கும். எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காது.

மூன்று மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்.


அது போல் நீங்கள் எச்செயல் செய்தாலும் எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்து வருவீர்களானால் சிவனாகவே மாறி ஆனந்தமாக வாழ்ந்திடுவீர்.