அட்சய திருதியை நாளில் லக்ஷ்மி ஆசி பெற தங்கம் தவிர வேறு என்னென்ன பொருட்களை வாங்கலாம்.

Akshaya Tritiya puja: அட்சய திருதியை 2022

அட்சய திருதியை இந்து சமூக மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த ஆண்டு மே 3ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் பொதுவாக தங்கம், வெள்ளி மற்றும் நகைகளை வாங்குவது வழக்கம்.
ஏன் தங்கம்...

அட்சய திருதியை நாளில் எந்த பொருள் வாங்கினாலும் அது பல்கி பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. எனவே, பல காலமாக அட்சய திருதியை நாளில் பொதுமக்கள் தங்கம், வெள்ளி வாங்கி வருகின்றனர். இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, நகை வியாபாரம் களைகட்டும்.

தங்கம் மட்டுமல்ல

பொதுமக்கள் அதிகளவில் தங்கம், வெள்ளி வாங்கினாலும் அட்சய திருதியை நாளில் வேறு சில பொருட்களையும் வாங்கலாம். பொதுவாகவே இந்நாளில் எதை வாங்கினாலும் அது பெருகி வளம் தரும் என்பதே நம்பிக்கை. அவ்வகையில் வேறு என்னென்ன பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்கலாம்....

சிப்பி

சிப்பிகள் லக்ஷ்மிக்கு பிடித்த பொருளாக கருதப்படுகிறது. எனவே அட்சய திருதியை நாளில் சிப்பி வாங்கி லக்ஷ்மியின் பாதத்தில் வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

கோதுமை

அட்சய திருதியை நாளில் கோதுமை அல்லது அரிசி போன்ற தானியங்களை வாங்கலாம். அட்சய திருதியை நாளில் தங்கத்தை போலவே தானியம் வாங்குவதும் உகந்ததாக கருதப்படுகிறது.

சங்கு

சிப்பியை போலவே சங்குகளும் லக்ஷ்மிக்கு பிடித்ததாக கருதப்படுகிறது. எனவே அட்சய திருதியை நாளில் சங்கு வாங்கி வீட்டில் வைத்தால் மகிழ்ச்சியும், செல்வமும் வரும் என்பது நம்பிக்கை. ஆனால் ஒரு சங்கு மட்டுமே வீட்டில் இருக்க வேண்டுமாம்.

பானை

அட்சய திருதியை நாளில் பானை வாங்குவது அதிர்ஷ்டம் தரும் என நம்பப்படுகிறது.