👉 1926ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதலாவது திரவ எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசூசெட்சில் ராபர்ட் கொடார்ட் (Robert Goddard) என்பவர் செலுத்தினார்.


முக்கிய தினம் :-


தேசிய தடுப்பூசி தினம்

💉 போலியோவை நாட்டிலிருந்தே விரட்டவேண்டும் என்பதற்காக மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

💉 போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கைகால்களை நிரந்தரமாக செயலிழக்கச் செய்கின்றன. போலியோ நுண்கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.

💉 அதற்காக 1995ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டுமுறை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும் வழங்கப்பட்டதன் மூலம் 2014ஆம் ஆண்டு போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது.


நினைவு நாள் :-

👉 1989ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி குழந்தை இலக்கிய கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்தார்.


பிறந்த நாள் :-


முனைவர் இரா.திருமுருகன்

✍ சிறந்த தமிழ் அறிஞரும், இயற்தமிழ், இசைத்தமிழில் வல்லவருமான முனைவர் இரா.திருமுருகன் 1929ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்ற ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் மீதான பற்றால் தன் பெயரை திருமுருகன் என மாற்றிக்கொண்டார்.

✍ தமிழ் வளர்ச்சிக்காகவே பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். புதுவையில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் கட்டாயம் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று குரல் கொடுத்தார் இவர்.

✍ தமிழுக்கு புதிய இலக்கணம் உருவாக்குவதிலும், இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும் ஈடுபட்டார். இலக்கணச்சுடர், இயல்இசை செம்மல், முத்தமிழ் சான்றோர், நல்லாசிரியர், மொழிப்போர் மறவர், பாவலர் அரிமா, கலைச்செல்வம் உள்ளிட்ட பல விருதுகள் மற்றும் பட்டங்களை பெற்றுள்ளார்.

✍ இலக்கணக் கடல் எனப் புகழப்பட்டவர். இவர் 55 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது 40 ஆண்டுகால தமிழ்ப் பணிகள், தமிழியக்கம் என்ற பெயரில் வெளியான நூல்களில் இடம்பெற்றுள்ளன.

✍ தமிழ் வளர்ச்சி, தமிழர் நலனுக்காகவே இறுதிவரை பணியாற்றிய இரா.திருமுருகன் தனது 80வது வயதில் (2009) மறைந்தார்.


ரிச்சர்டு ஸ்டால்மன்

👉 ஜிஎன்யூ மென்பொருளை அறிமுகப்படுத்திய ரிச்சர்டு மாத்யூ ஸ்டால்மன் 1953ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார்.

👉 இவர் 16 வயதில் தனது முதல் புரோகிராமை ஐபிஎம் நியூயார்க் அறிவியல் மையத்தில் ஐபிஎம்-360 கணினியில் எழுதினார். எம்ஐடியின் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடத்தில் (ஏஐஎல்) புரோகிராமராக இருந்தார்.

👉 மென்பொருள் பயன்பாட்டை மேம்படுத்தினார். சுதந்திரமாக கணினியைப் பயன்படுத்துவது என்பதை இலக்காகக் கொண்டு சுதந்திர மென் பொருள் இயக்கம் (Free Software Movement) என்ற அமைப்பைத் தொடங்கினார். இவர் மேம்படுத்திய ஜிஎன்யூ (GNU) பிராஜக்ட்டை 1983-ல் வெளியிட்டார்.

👉 எனக்கு எப்போதுமே பணம் முக்கியமாக இருந்ததில்லை. நான் அதன் கட்டுப்பாட்டில், அதற்கு அடிமையாக இருக்க விரும்பியதில்லை என்று கூறிய இவர் தனது 64வது வயதை நிறைவுசெய்கிறார்.



இன்றைய தின நிகழ்வுகள்


கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. செடேக்கியா மன்னராக முடிசூடினார்.

455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.

1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சில் ஒமோனொம் தீவை அடைந்தார்.

1660 – இங்கிலாந்தில் லோங் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் ரோட்டான் என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றின.

1792 – சுவீடன் மன்னர் மூன்றாம் குசுத்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார்.

1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அவராசுபரோ சமர் ஆரம்பமானது. இஒதில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் பெரும் இழப்பைச் சந்தித்தன.

1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.[1]

1917 – முதலாம் உலகப் போர்: செருமனியின் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியது.

1925 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் வரை உயிரிழந்தனர்.

1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.

1935 – வெர்சாய் ஒப்பந்தத்தை மீறும் வகையில் எதிராக செருமனி மீண்டும் புதுப்படைக்கலன்கள் தயாரிப்பதில் ஈடுபட வேண்டும் என இட்லர் உத்தரவிட்டார்.

1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.

1942 – முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).

1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் செருமனியின் வூர்சுபேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.

1963 – பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.

1966 – ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.

1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1969 – வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் உயிரிழந்தனர்.

1978 – இத்தாலியின் முன்னாள் பிரதமர் அல்டோ மோரோ கடத்தப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார்.

1979 – சீன-வியட்நாமியப் போர்: மக்கள் விடுதலை இராணுவம் எல்லையைக் கடந்து சீனாவினுள் நுழைந்ததை அடுத்து, போர் முடிவுக்கு வந்தது.

1985 – அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் 1991 டிசம்பர் 4 இல் விடுதலை ஆனார்.

1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

1995 – மிசிசிப்பி அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஏற்றுக் கொண்ட கடைசி அமெரிக்க மாநிலமானது.

2001 – சீனாவின் சிஜியாசுவாங் நகரில், இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 108 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர்.

2005 – இசுரேல் எரிக்கோவை அதிகாரபூர்வமாக பாலத்தீனியர்களிடம் ஒப்படைந்தது.

2006 – மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

2014 – கிரிமியாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பில் உக்ரைனில் இருந்து பிரிந்து உருசியாவுடன் இணையப் பெருமான்மையானோர் வாக்களித்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1693 – மல்கர் ராவ் ஓல்கர், மராட்டிய மன்னர் (இ. 1766)

1750 – கரோலின் எர்ழ்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1848)

1751 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ. 1836)

1774 – மேத்தியூ பிலிண்டர்சு, ஆங்கிலேய நிலப்படவியலாளர் (இ. 1814)

1789 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1854)

1799 – அன்னா அட்கின்சு, ஆங்கிலேய தாவரவியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1871)

1839 – சல்லி புருதோம், நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞர் (இ. 1907)

1859 – அலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர் (இ. 1906)

1888 – எம். ஆர். சேதுரத்தினம், தமிழக அரசியல்வாதி

1901 – பொட்டி சிறீராமுலு, இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1952)

1910 – இப்திகார் அலி கான் பட்டோடி, இந்திய-ஆங்கிலேய துடுப்பாளர், 8வது பட்டோடி நவாப் (இ. 1952)

1916 – சுடோமு யாமகுச்சி, சப்பானிய பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2010)

1918 – எஸ். ஏ. நடராஜன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்

1926 – ஜெர்ரி லுவிஸ், அமெரிக்க நடிகர்

1927 – விளாடிமிர் கொமரோவ், உருசிய விண்வெளி வீரர் (இ. 1967)

1929 – அ. கி. இராமானுசன், இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர் (இ. 1993)

1929 – இரா. திருமுருகன், தமிழகத் தமிழறிஞர்

1940 – இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (இ. 2012)

1953 – ரிச்சர்ட் ஸ்டால்மன், கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்.

1954 – அருண் விஜயராணி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2015)

1959 – இயென்சு சுடோல்ட்டென்பர்க், நோர்வேயின் 47வது பிரதமர்

1959 – விஜயதாச ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி

இன்றைய தின இறப்புகள்


1940 – செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1858)

1963 – எம். பதஞ்சலி சாஸ்திரி, இந்தியாவின் 2வது தலைமை நீதிபதி (பி. 1889)

1974 – கோ. சாரங்கபாணி, தமிழக ஊடகவியலாளர், எழுத்தாளர், வெளியீட்டாளர் (பி. 1903)

1978 – மணியம்மையார், திராவிடர் கழகத்தின் தலைவர், சொற்பொழிவாளர், பெரியாரின் 2வது மனைவி (பி. 1920)

1989 – அழ. வள்ளியப்பா, தமிழகக் குழந்தை இலக்கியக் கவிஞர் (பி. 1922)

2003 – இரேச்சல் கோரீ, அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1979)

2008 – அனுரா பண்டாரநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1949)

2014 – அமலெந்து டே, இந்திய வரலாற்றாசிரியர் (பி. 1929)

2016 – அலி அகமது உசேன் கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (பி. 1939)